ஊடக சுதந்திரத்தை முடக்குகிறதா ஈரான்? நேர்காணல்கள் வழங்க கட்டுப்பாடு
இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரானதாகக் கருதப்படும் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய ஊடகங்கள் உள்ளிட்ட “விரோத” ஊடக நிறுவனங்களுடன் நேர்காணல்கள் மற்றும் பிற தகவல்தொடர்புகளை மேற்கொள்வதைக் குற்றமாக்கும் சட்டமூலத்திற்கு ஈரானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டமூலம் சட்டமாவதற்கு முன்பு, அரசியலமைப்புப் பாதுகாப்புக் குழுவால் மேலும் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ், விரோத ஊடகங்களுடனான உறவுகளுக்குத் தடை – அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அதுபோன்ற நாடுகளால் ஆதரிக்கப்படும் ஊடக நிறுவனங்களுடன் நேர்காணல்களை நடத்துவது அல்லது கலந்துரையாடல்களில் பங்கேற்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அதேநேரம்பிற வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுடன் நேர்காணல்களை நடத்துவதற்கு, புலனாய்வு அமைச்சகத்திற்குத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுடனான உறவுகள் – வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து முன் அறிவிப்பு மற்றும் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் வெளிநாட்டுத் தூதரகங்கள், அமைப்புகள் அல்லது பிற வெளிநாட்டு அல்லாத நிறுவனங்களைத் தொடர்புகொள்வது அபராதம் மற்றும் சில சமூக உரிமைகளை இழக்க நேரிடும் குற்றமாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில், ஈரானிய புகைப்படக் கலைஞர் யல்டா மொயாரிக்கும், விரோத ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளித்தது மற்றும் அமெரிக்க, இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகளுக்குப் புகைப்படங்களை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, அதே சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை நினைவுக்கூறத்தக்கது.




