அமெரிக்காவுடன் எந்வொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை – ஈரான்
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை என ஈரான் உத்தியோகப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
தோஹாவில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் சந்திப்பார்கள் என்று ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில் ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்து மேற்படி தெரிவித்துள்ளது.
இந்த முரண்பட்ட அறிக்கைகள் அமெரிக்க-ஈரான் ராஜதந்திரத்தின் எதிர்காலம் குறித்து புதிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானிய தொழில்நுட்பக் குழு ஒன்று இந்த வாரம் கத்தாருக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
ஆனால் அந்தப் பயணம் அமெரிக்க அதிகாரிகளுடனான எந்தவொரு சந்திப்புடனும் தொடர்பில்லாதது என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.




