உலகம்

சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் அறிவிப்பு

சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையானது வளைகுடா நாடுகளுக்கு அப்பால் எரிசக்தி விநியோகத்தை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கினால், செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb ) நுழைவாயிலை மூடுமாறு ஈரான் ஹூதிகளை வலியுறுத்தியிருந்தது.

இதற்கமைய ஹூதிகளின் ஆயுதப் படைகள், ‘கண்ணுக்குக் கண்’ என்ற சமன்பாட்டின் அடிப்படையில், குற்றவாளியான சவூதி எதிராக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒரு கடல்வழித் தடையை அறிவிப்பதாக”க் கூறியுள்ளன.

இது தொடர்பில் சவூதி அரேபியாவிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா  நேற்று இரவு முழுவதும் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்