ஹாங்காங்(Hong Kong) தீ விபத்து – பலி எண்ணிக்கை 160ஆக உயர்வு
Hong Kong fire: Death toll rises to 160
பல தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் மேலும் ஒரு உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் சிக்கிய ஆறு பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது 1980ம் ஆண்டுக்குப் பிறகு உலகின் மிக மோசமான குடியிருப்பு கட்டிட தீ விபத்து ஆகும்.
தொடர்புடைய செய்தி





