இந்தியா செய்தி

360-டிகிரி தாக்குதல் – ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் புதிய திட்டம்

  • December 26, 2025
  • 0 Comments

விரைவில் இந்தியா “360-டிகிரி தாக்குதல் திட்டம்” மூலம் ஒழுங்குசெய்யப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2025 பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பஹால்காம் நகரில் ஏப்ரல் 22 ஆம் திகதி  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக பதிலடி கொடுத்துள்ளன. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – முதல் நாளிலேயே 20 விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா

  • December 26, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே(Boxing Day) டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. ஆஸ்திரேலிய […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வேலை விசாவில் UKவிற்கு வருகை தருபவர்கள் தஞ்சம் கோருவது அதிகரிப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிட விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த ஆண்டில் (2024)  வேலை விசாவில் வருகை தந்த 13000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தஞ்சம் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வேலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தருபவர்கள் பின்பு தஞ்சம் கோருவது கடுமையாக அதிகரித்து வருவதாக உள்துறை அலுவலகத்தின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, வேலை விசாவில் பிரித்தானியாவிற்கு வருகை தந்த 13427 பேர் தஞ்சம் கோரியுள்ளனர். இது முந்தைய ஆண்டில்(2023)  9392 காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜுலை […]

உலகம் செய்தி

தாய்லாந்து கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொள்வதாக கம்போடியா குற்றச்சாட்டு

  • December 26, 2025
  • 0 Comments

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்து விமானப்படை, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கம்போடியாவின் இராணுவ நிலைகளின் மீது இன்று வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பிறகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. ஆனால் கம்போடியா பாதுகாப்பு அமைச்சகம், தாய்லாந்து பொதுமக்களின் வீடுகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது. இதன்போது பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் ஏற்பட்ட தற்காலிக […]

இலங்கை

புதிய கட்டிடத்திற்கு 2026 இல் நிதி ஒதுக்கீடு- பார்வையிட சென்ற அரசியல்வாதிகள்!!

  • December 26, 2025
  • 0 Comments

திருகோணமலை- வான்எல மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன இன்று (26) விஜயம் செய்தனர். கந்தனாய் கல்வி வலயத்திற்குட்பட்ட வான்எல மகா வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக பாடசாலை சமூகத்தினரால் அரசியல் பிரமுகர்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு அவசரத் தேவையாக இருக்கும் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு 2026 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு திட்டத்துடன் கல்லூரியின் வளர்ச்சி குறித்து கிழக்கு […]

இலங்கை செய்தி

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!

  • December 26, 2025
  • 0 Comments

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு (Police Media Unit) இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையின் பிரகாரம், இராணுவத்தினரால் (military) டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல் ரக pistol gun துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டிருந்த […]

அரசியல் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டக்லஸ் தேவானந்தா சி.ஐ.டியினரால் கைது

  • December 26, 2025
  • 0 Comments

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியை, பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவன் ‘மாகந்துரே மதுஷிடம்’ முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் […]

உலகம்

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் – இருவர் உயிரிழப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில்   கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில்  இரண்டு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். தாக்குதல்தாரி கிழக்கு நகரமான பெய்ட் ஷீனில் (Beit Shean) பாதசாரி மீது மோதியதாகவும், பின்னர் மேற்கே சுமார் 8 மைல் (12.5 கிமீ) தொலைவில் உள்ள ஐன் ஹரோட் ( Ein Harod) பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அவசர சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேகநபர் கபாடியாவைச் […]

அரசியல் இலங்கை செய்தி

குட்டி நாயா, பெரிய நாயா? சிறிதரன், அர்ச்சுனாவுக்கிடையில் கடும் சொற்போர்!

  • December 26, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் அர்ச்சுனாவுக்கிடையில் இன்று (26) கடும் சொற்போர் மூண்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றபோதே இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து கொண்டனர். “குட்டி நாய் மாதிரி குறைத்துக்கொண்டிருக்ககூடாது…” என்று சிறிதரன் எம்.பி., இளங்குமரன் எம்.பியை நோக்கி குறிப்பிட்டார். இதன்போது இடைமறித்த அர்ச்சுனா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குட்டிநாய், பெரிய நாய் என்று விளிக்ககூடாது என இடித்துரைத்தார். இந்த விடயத்தை அர்ச்சுனா எம்.பி., மீண்டும், மீண்டும் சபையில் சுட்டிக்காட்டினார். இதனால் கடுப்பான […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அரசு முற்றாக நிராகரிப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

“ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கம் செயல்படவில்லை.” என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa இன்று (26) தெரிவித்தார். “ சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகின்றன. இவற்றுக்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.” எனவும் அமைச்சர் கூறினார். போலியான செய்திகளால் நாட்டின் சுகாதாரம்மீதான நம்பிக்கை சீர்குலையக்கூடும். அதேபோல தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, […]