இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று : ஒருவர் மரணம்!

  • May 25, 2023
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் புதிதாக 15 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை  நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

2,000 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்த ஈரான்!

  • May 25, 2023
  • 0 Comments

ஈரான் 2,000 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணையை  இன்று (25) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதன்படி 1,500 கிலோ (3,300 எல்பி) போர்க்கப்பலைச் சுமந்து செல்லக்கூடிய 2,000 கிமீ (1,243 மைல்கள்) தூரம் வரை செல்லக்கூடிய  கோரம்ஷஹர் 4 பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் பரிசோதணை செய்துள்ளது. யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் காட்சிகளை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது குறித்து ஈரானிய பாதுகாப்பு மந்திரி முகமதுரேசா அஷ்டியானி  கூறுகையில்,   மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை திட்டங்களில் ஒன்றான ஈரான், […]

ஐரோப்பா

இலவசத்துக்கு ஆசைப்பட்ட கணவனால் வெளிநாட்டு சிறையில் வாடும் மனைவி

  • May 25, 2023
  • 0 Comments

இணையத்தில் கிடைக்கும் சலுகைகள் மீது நாட்டம் கொண்ட சுவிஸ் நாட்டவர் ஒருவரால், அவரது மனைவி வெளிநாடொன்றில் சிறையில் வாடுகிறார். எலிசபெத்தும் பீற்றரும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த ஓய்வு பெற்ற தம்பதியர். பீற்றருக்கு எப்போதுமே இணையத்தில் சலுகை விலையில் கிடைக்கும் பொருட்கள் மீது ஒரு ஆர்வம். ஆனால், அவரது இலவச ஆசை அவரது மனைவியை சிறைக்கு அனுப்பிவிட்டது.2021ம் ஆண்டு, பீற்றருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அவருக்கு பல மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சொத்து கிடைக்க இருப்பதாகவும், கொலம்பியாவுக்கு இலவச […]

இலங்கை

கொழும்பில் இருந்து காங்கேசன் துறைக்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

  • May 25, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான ரயில் சேவை மீண்டும்  ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே இடம்பெறுகின்றன. இந்நிலையில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தை […]

ஆஸ்திரேலியா

சிட்னியில் பாரிய தீவிபத்து : மற்ற கட்டிடங்களுக்கும் தீ பரவியதால் சேதம்!

  • May 25, 2023
  • 0 Comments

சிட்னியின் சிபிடியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலதளங்களை கொண்ட கட்டிடமொன்று தீப்பிடித்ததை தொடர்ந்து குறித்த தீ மற்ற கட்டிடங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் பெரும்புகைமண்டலத்தை காணமுடிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்டிரல் ஸ்டேசனிற்கு பின்னால் உள்ள கட்டிடமொன்று முற்றாக எரியுண்டுள்ளது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்காக பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்புபடைவீரர்களும் 20க்கும்மேற்பட்ட தீயணைப்பு படைவாகனங்களும் தீயை கட்டுப்படுத்த முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருகட்டிடம் தீயினால் முற்றாக […]

இலங்கை

சத்திர சிகிச்சையின் போது சிறுநீரகத்திலிருந்து மீட்கப்பட்ட விசித்திரமான கல்

  • May 25, 2023
  • 0 Comments

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தலைமையில் நடைபெற்ற சத்திரசிகிச்சையின் போதே இந்த விசித்திரமான கல் சிறுநீரகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன் , அர்ப்பணிப்புடன் சேவை வழங்கிய ஏனைய வைத்தியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் சத்திர சிகிச்சை நிபுணர் பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் […]

செய்தி தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் பொறுப்பேற்றார்

  • May 25, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த டாக்டர் மா ஆர்த்தி கடந்த 16ஆம் தேதி அனைவருக்கும் கல்வித் திட்டம் இயக்க திட்ட இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக நில அளவைத் துறை கூடுதல் இயக்குனராக இருந்த கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி மோகன் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் […]

செய்தி தமிழ்நாடு

பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு

  • May 25, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இந்த கிராமத்தில் 1990ம் ஆண்டு அக்ராமத்தில் ஒருவர் வீடு கட்ட பள்ளம் தோன்றிய போது சுமார் முக்கால் அடி உயரம் உள்ள புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு அத்தெருவில் உள்ள பஜனை திருக்கோயிலில் வைத்து இன்று வரை அக்கிராம மக்களால் கிருஷ்ணனுடன் ,புத்தரையும் இன்று வரை வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஓரு ஆண்டுக்கு முன்பு தற்போதைய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரான பொற்கொடி என்பவர் மாவட்ட […]

பொழுதுபோக்கு

சூரி நடித்த “விடுதலை” படைத்துள்ள மகத்தான சாதனை

  • May 25, 2023
  • 0 Comments

கடந்த 2023 மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “விடுதலை பாகம் 1” சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்து வெளியானது “விடுதலை பாகம் 1” திரைப்படம். இப்படம் திரையரங்குகளில் பார்வையாளர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் […]

அறிந்திருக்க வேண்டியவை

வீட்டிலிருந்தே வேலை செய்யும் தம்பதிகளின் அனுபவம் தொடர்பில் வெளியான தகவல்!

  • May 25, 2023
  • 0 Comments

வீட்டிலிருந்தே வேலை செய்யும் தம்பதிகளின் அனுபவம் ஒரே மாதிரி இருப்பதில்லை என ஆய்வில் தகவல். ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஃபிஷர் காலேஜ் ஆஃப் பிசினஸ் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, கணவன்-மனைவி இருவரும் அலுவலக வேலைகளை வீட்டில் இருந்து செய்யும் போது குடும்பம் தொடர்பான பணிகளை அதிக அளவில் முடிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மனைவிகள் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, அலுவலகத்தில் பணிபுரியும் போது செய்த பணிகளை விட குறைவான பணிகளை தான் […]