உலகம்

அமெரிக்காவில் பாரிய துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள வில்லோபுரூக்கில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் விபரங்களை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஹனி சக்கிள் லேன் அருகே ரூட் 83 இல் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் ஜுன்டீன்த் கொண்டாட்டத்திற்காக ஒரு பெரிய குழு கூடியிருந்ததாகவும், இதன்போது வன்முறை வெடித்ததாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி […]

இந்தியா

ராஜஸ்தான் மருத்துவமனையில் சினிமாப்பாணியில் அரங்கேறிய வினோத சம்பவம்

  • June 18, 2023
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்துள்ள மிகப்பெரிய எம்பிஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வழக்கறிஞர் ஒருவர் சினிமா பட பாணியில், தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தார். கருப்பு நிற கோட் அணிந்திருந்த அவர், தனது பைக் வாகனத்தை ஓட்டிக்கொண்டே லிப்டை அடைந்தார். பின்னர் அவர் லிட்டுக்குள் பைக்குடன் உள்ளே நுழைந்தார். பைக்குடன் மூன்றாவது மாடியை அடைந்தார். லிப்டுக்குள் இருந்து பைக்குடன் வெளியே வந்த வழக்கறிஞரை பார்த்து, அங்கிருந்த […]

ஐரோப்பா

ககோவ்கா வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போன 31 பேர் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

  • June 18, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைந்ததையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக கீய்வ் தெரிவித்துள்ளது. மாஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். ஜூன் 6 அன்று ககோவ்கா அணை உடைந்ததால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், விவசாய நிலங்களை அழித்து, பொதுமக்களுக்கான விநியோகம் துண்டிக்கப்பட்டது. பெருமளவானோர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். Kherson மற்றும் Mykolaiv பிராந்தியங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 3,600 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், 31 […]

இலங்கை

கம்பளை பிரதேசத்தில் இளம் ஜோடி செய்த மோசமான செயல்!

  • June 18, 2023
  • 0 Comments

கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தில் இரண்டு மாத கால இடைவெளியில் ஒன்பது வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள், பணம், கையடக்க தொலைபேசிகள் உட்பட 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய இளம் ஜோடியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் 25 வயது நபரும் அவரின் 20 வயது மனைவியுமே முச்சக்கர வண்டி ஒன்றினை பயன்படுத்தி மேற்படி கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளை, ஹெட்காலை நாவலப்பிட்டி, தௌலஸ்பாகை, அபுகஸ்தலாவ, ஹல்கொல்ல, அஸ்வன்ன, வரக்காவ, பத்துனுபிட்டிய மற்றும் […]

வட அமெரிக்கா

கனடாவில் இலங்கை பெண் கொலை வழக்கு ;நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள தகவல்

  • June 18, 2023
  • 0 Comments

கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் கொலையில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள […]

பொழுதுபோக்கு

விராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா! வெளியான புதிய தகவல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் விராட் கோலி ‛ஏ பிளஸ்’ பிரிவில் உள்ளதால், ரூ.7 கோடி வருமானம் கிடைக்கிறது. பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 252 மில்லியன் பேர் பின் தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்து ‛ஸ்டாக் குரோ’ என்ற நிறுவனம் […]

இலங்கை

கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்க அனுமதி!

  • June 18, 2023
  • 0 Comments

கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பேருந்துகளில் இருந்து வெளியேறும் புகைகயினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள்இ அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம் இவை இரண்டிற்கும் இதன் மூலம் தீர்வுக்காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘அனைத்து பொது போக்குவரத்து ஊடகங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதே இதற்கான தீர்வாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பேருந்துகள் மட்டுமன்றி மின்சார முச்சக்கர வண்டிகள் வேன்கள். ரயில்களையும் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் […]

பொழுதுபோக்கு

தனது திருமணம் குறித்து மனம் திறந்தார் தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது திருமணம் குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார். “திருமணம் என்பது முக்கியமான பொறுப்பு. அந்த பொறுப்புக்கு நம்மை தயார்படுத்திக்கொண்ட பிறகுதான் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும். திருமணம் என்றால் ஏதோ பார்ட்டி செய்து கொள்வது போல அல்ல. அது நீண்ட காலம் இணைந்து இருக்கும் பந்தம். எனவே திருமண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக […]

உலகம்

தீவிரமடையும் உக்ரைன் போர்! அணு ஆயுதங்களை குவித்த ரஷ்யா: உலக நாடுகள் அதிர்ச்சி

உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. அண்மையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்தது. இதற்கு உக்ரைன் டிரோன் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் […]

ஐரோப்பா

மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு 40 இந்தியர்களுக்கு கௌரவ விருது

  • June 18, 2023
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌவுரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை வெகுவிமர்சியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியினர் சிறப்பிக்கப்பட உள்ளனர். அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 40க்கும் மேற்பட்ட கௌவுரவ விருது அளிக்கப்பட உள்ளது. இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. […]