ஐரோப்பா செய்தி

நவீன பிரித்தானியாவை காட்டாத பாடசாலை நூல்கள் – மாணவர்கள் கூறுவது என்ன?

  • February 8, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மீண்டும் வாசிப்பில் ஈடுபடுத்துவது கல்வித் துறையில் தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. இதன் மையமாக, பாடசாலைகளில் கற்பிக்கப்படும் ஆங்கில இலக்கியப் பாடத்திட்டம் உள்ளது. ‘லிட் இன் கலர்’ (Lit in Colour) என்ற இயக்கம், GCSE வாசிப்புப் பட்டியல்கள் நவீன பிரித்தானிய சமூகத்தை சரியாக பிரதிபலிக்கவில்லை என்று கூறி, அவற்றை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. தற்போதைய பாடத்திட்டத்தில் பன்முகத்தன்மை குறைவாக இருப்பதாகவும், மாணவர்கள் வாழும் சமூகத்தின் பல்வேறு குரல்களை […]

ஐரோப்பா செய்தி

தூதுவர் பதவி நீக்கம் – மண்டேல்சன் சம்பளத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என அழுத்தம்

  • February 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம், எப்ஸ்டீன் தொடர்பான அண்மைய வெளிப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில், குழந்தை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக, பணியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய ஆவணங்கள், அவர் அமைச்சராக இருந்தபோது எப்ஸ்டீனுக்கு தகவல்களை கசியவிட்டிருக்கலாம் என்பதைக் காட்டியதால், வெஸ்ட்மின்ஸ்டரில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் கெய்ர் […]

உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை – அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் இஸ்ரேல்!

  • February 8, 2026
  • 0 Comments

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் பிரதமரும் வரும் புதன்கிழமை வொஷிங்டனில் சந்திப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஓமானின் மஸ்கட்டில்  அணுசக்தி பேச்சுவார்த்தைகளை  நடத்தியிருந்தனர். இதன்போது அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யுரேனியம் செறிவூட்டலை ஈரான் தனது உரிமையாக கருதுகிறது. பேச்சுவார்த்தைகளில் இந்த விடயத்தில் சமரசம் செய்யாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பாலிஸ்டிக் […]

இலங்கை

வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் பூர்த்தி – சிவாஜிலிங்கம் நினைவுப்பகிர்வு

  • February 8, 2026
  • 0 Comments

1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி ஐயா, சபாரத்தினம்பிள்ளை ஐயா, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஐயா ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள். 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை தாக்கும் மற்றொரு புயல் – 11000 பேர் வெளியேற்றம்!

  • February 8, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை தாக்கிய தொடர்ச்சியான காற்று மற்றும் மழையின் காரணமாக 11,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபீரிய தீபகற்பத்தை லியோனார்டோ (Leonardo) புயல் தாக்கியதை தொடர்ந்து மற்றொரு புயலான மார்டா இவ்வார இறுதியில் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் நிலைமையானது,  கடுமையான மழைவீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவை  கொண்டுவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்பெயின் […]

ஐரோப்பா

அமெரிக்காவிற்கு எதிராக இத்தாலியில் போர்கொடி! 10000 போராட்டக்காரர்கள் களத்தில்!

  • February 8, 2026
  • 0 Comments

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கத்திற்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஐஸ் முகவர்களின் இருப்புக்கு எதிராக 10000 பேர் ஒன்றுக்கூடி  இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆரம்பத்தில் அமைதியானமுறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இறுதியில் துரதிஷ்டவசமான நிலையை கொண்டுவந்துள்ளது. விளையாட்டுகளிலிருந்து வெளியேறு,  இனப்படுகொலை நாடுகள், பாசிச […]

ஐரோப்பா செய்தி

37 ஆண்டுகளுக்கு பின்னர் நைஜீரியா பயணமாகும் பிரித்தானிய மன்னர்!

  • February 8, 2026
  • 0 Comments

37 ஆண்டுகளுக்கு பின்னர் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நைஜீரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பக்கிங்ஹாம்  (Buckingham) அரண்மனை அறிவித்துள்ளது. மார்ச் 18 முதல் 19 வரை விண்ட்சர் கோட்டையில் மன்னரின் விருந்தினர்களாக இருப்பதற்கான அழைப்பை போலா டினுபு (Bola Tinubu) மற்றும் முதல் பெண்மணி ஒலுரேமி டினுபு (Oluremi Tinubu) ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. நைஜீரிய அரசு இங்கிலாந்துக்கு கடைசியாக 1989 ஆம் ஆண்டு விஜயம் செய்திருந்தது. அப்போது […]

உலகம் செய்தி

தாய்லாந்தில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெறும் பொதுத் தேர்தல்!

  • February 8, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் பொதுத் தேர்தல் இன்று (08) நடைபெறுகிறது. பல வருட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இடம்பெறும் இந்த தேர்தலில் மில்லியன் கணக்கான தாய்லாந்து மக்கள் வாக்களிக்க உள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் அனுடின் சான்-ஓ-சாவால் இந்த  பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது பூமிபோல் அதுல்யாதேஜ் கட்சியோ அல்லது வாக்கெடுப்பில் முன்னணியில் இருக்கும் மக்கள் கட்சியோ இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள 500 இடங்களில் எந்தக் கட்சியும் […]

இலங்கை

போராட்டம் நடத்தினாலும் சம்பள உயர்வு வழங்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!

  • February 8, 2026
  • 0 Comments

2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது தவணை வழங்கப்படும் வரை, பொதுத்துறை ஊழியர்களுக்கு எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  2027 ஜனவரியில் சம்பள உயர்வு நிலுவையில் இருக்கும்போது கொடுப்பனவுகளுக்காக போராடுவது நியாயமானதல்ல என்றார். சம்பள உயர்விற்காக அரசாங்கம் 330 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டு […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டு தாக்குதல் –   ISIS  அமைப்பு பொறுப்பேற்பு!

  • February 8, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு  ISIS  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காதிஜா அல்-குப்ரா (Khadija Al-Kubra) என அறியப்படும் நபர் தற்கொலை குண்டு தாக்குதலை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதல்தாரியின் தாய், சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்புடைய செய்தி  பாகிஸ்தானில் […]