இலங்கை

ஹொரவ்பொத்தானையில் துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

  • August 17, 2023
  • 0 Comments

ஹொரவ்பொத்தான -வாஹல்கட பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை-மாவட்டத்தில் ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் எல்லையை தாண்டி T-56 துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தான -01ம் கட்டை பகுதியைச் சேர்ந்த யோதகே சுனில்சாந்த (58) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- […]

வட அமெரிக்கா

ஹவாய் பலி எண்ணிக்கை 106-ஐ தாண்டியது – கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்

  • August 17, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்கள்தொகையை தவிர்த்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது. மளமளவென தீப்பற்றி எரிந்தநிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 25 ஆயிரம் ஏக்கருக்கும் […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் வசூலை தாங்க முடியாத ப்ளூ சட்டை மாறன்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க…

  • August 17, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே அந்த படத்திற்கு நெகட்டிவிட்டி பரப்பி வந்தவர் தான் திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இந்த படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ என்ற பெயரில் ரஜினியை தவிர மற்ற எல்லோரும் தான் நன்றாக நடித்து இருக்கிறார்கள் என்றார். இப்பொழுது ஜெயிலர் படம் உலகம் முழுவதும் தாறுமாறான வசூலை குவித்து கொண்டிருக்கிறது இதை ஜீரணிக்க முடியாத ப்ளூ சட்டை ஜெயிலர் படத்தின் […]

இலங்கை

எமக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை;சஜித் பிரேமதாச

  • August 17, 2023
  • 0 Comments

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலுள்ள அரசாங்கத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது நாட்டில் அடக்குமுறைப் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்துகின்றது. மற்றும் தீவிரமான இடதுசாரி மற்றும் முதலாளித்துவத்தைப் பின்தொடராத, மூன்றாம் வழியைப் பின்பற்றும் கட்சி என்ற வகையில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மட்டுமின்றி பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாக்கும் கடமையுணர்வுடன் தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். “13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடினாலும் முறையான […]

அறிந்திருக்க வேண்டியவை

தென்துருவ பயணத்தில் சந்திராயனை பின்தொடரும் ரஷ்யா

  • August 17, 2023
  • 0 Comments

நிலவின் தென் துருவத்தை அடைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் திகதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன்-3 விண்கலமானது, பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்று , அதன் சுற்றளவு குறைக்கப்பட்டு, தற்போது இறுதி கட்ட பாதையில் சந்திராயன்-3 செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

ஐரோப்பா

ரஷ்ய நடத்திய உச்சக்கட்ட தாக்குதலில் 4 உக்ரைன் போராளிகள் பலி

  • August 17, 2023
  • 0 Comments

உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்ற நான்கு உக்ரைன் போராளிகள் ரஷ்ய படைகளின் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் கொண்ட குழு ஒன்று தனது எல்லையை கடக்க முயன்றபோது உக்ரைன் உளவாளிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். முன்னதாக, உக்ரைன் போராளிகள் ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, ​​அதைத் தடுக்க ரஷ்ய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனிடையே, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியைச் சேர்ந்த கிராமம் ஒன்று அதிலிருந்து […]

உலகம்

அர்ஜென்டினாவில் பேருந்தில் திடீர் தீ விபத்து – ஓட்டம் பிடித்த பயணிகள்

  • August 17, 2023
  • 0 Comments

அர்ஜென்டினாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது பேருந்தின் பின்பக்கத்தில் புகை வந்ததால், சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவியதோடு, எரிபொருள் கசிந்து சாலையிலும் தீ பரவியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் […]

வாழ்வியல்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் அபாயம்?

  • August 17, 2023
  • 0 Comments

சர்க்கரை நோய் என்பது சர்க்கரை அளவை அதிகப்படுத்துவது மட்டுமின்றி சில துணை நோய்களையும் கொண்டு வந்து விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர் அந்த வகையில் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்யாசமாக இருக்கும் என்றும் குறிப்பாக டைப் 2 என்ற சர்க்கரை நோய் பெண்களுக்கு இதய நோயை வரவழைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆண்களை […]

ஆஸ்திரேலியா

உலகில் அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த இடம்!

  • August 17, 2023
  • 0 Comments

உலகில் அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் ஆஸ்திரேலியா 6வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 19 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட 50 மில்லியன் கணக்குகள் சமரசம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகில் அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவாகும். இது முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 830 சதவீதம் அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – ஸ்பெயின் – பிரான்ஸ் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்கள் குடும்பத்தை அழைத்துவர தடை?

  • August 17, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களின் குடும்பத்தாரை அங்கு அழைத்துவருவதை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இது தொடர்பில் திட்டமிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் கல்வி கற்கும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது பிரித்தானியாவில் முதுகலைப் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையையும் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துச் செல்லலாம். அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் தங்க வருகைத்தரும் வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. […]