உலகம்

06 தசாப்தங்களுக்கு பிறகு காசாவில் நிலப் பதிவு செய்யும் இஸ்ரேல் – உரிமையை இழக்கும் பாலஸ்தீனியர்கள்!

  • February 16, 2026
  • 0 Comments

1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு காசாவில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பதிவுக்கான செயல்முறையை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கையானது சர்வதேச சட்டத்தை மீறி பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கும் இடம்பெயர்வதற்கும் உதவும் என்று இஸ்ரேலிய உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன. தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ( Bezalel Smotrich) , நீதி அமைச்சர் யாரிவ் லெவின் (Yariv Levin) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. […]

இலங்கை செய்தி

யாழ். வலி.வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

“ யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.” இவ்வாறு கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekar தெரிவித்தார். மக்களுடைய காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “ பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் படையினரின் வசமிருக்க வேண்டிய தேவை […]

ஐரோப்பா

ஊழல் குற்றச்சாட்டு – உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது!

  • February 16, 2026
  • 0 Comments

உக்ரைனின்  முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டின் எல்லையை கடக்க முயன்றபோது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (NABU), கைது செய்யப்படதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சட்டத்தின் தேவைகள் மற்றும் நீதிமன்றத் தடைகளின்படி “ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் எரிசக்தி துறையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக NABU வெளிப்படுத்தியதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ஜெர்மன் கலுஷ்செங்கோ  (German […]

இலங்கை முக்கிய செய்திகள்

ஈழ மக்களின் குடியுரிமை பிரச்சினை – தேர்தல் காலத்தில் மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!

  • February 16, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை பிரஜைகளுக்கு குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில்,  இந்த பிரச்சினை  ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்று விவரித்துள்ளார். சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசித்து […]

இலங்கை செய்தி

O/L பரீட்சை நாளை ஆரம்பம்: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ” பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை […]

உலகம் செய்தி

லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே குண்டுவீச்சி தாக்குதல் – நால்வர் பலி!

  • February 16, 2026
  • 0 Comments

லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே இஸ்ரேலியப் படைகள் இன்று காலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலை உறுதிப்படுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், லெபனானில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவத்துள்ளது.  இருப்பினும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை. அத்துடன் லெபனானின் மஜ்தால் அஞ்சர்  (Majdal Anjar) பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,  […]

உலகம்

இங்கிலாந்து மற்றும் கனடாவின் சுற்றுலா பயணிகளுக்கு பயண சலுகை வழங்கிய சீனா!

  • February 16, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும்  கனடாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வரும் 17 ஆம் திகதி முதல் விசா இன்றி 30 நாட்கள் வரையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, வணிகம் அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்காக மேற்படி விசா இன்றிய நுழைவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை இவ்வருடத்தின்  டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தால் இலட்சக்கணக்கான பிரித்தானிய சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்க லிபரல் கட்சி திட்டம்!

  • February 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள Angus Taylor, தமது ஆட்சியில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குவதற்குரிய உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதற்கமைய ஆஸ்திரேலியாவுக்குள் வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்போகிறாராக உறுதியளித்துள்ளார். “Australia வாழ்க்கை முறையையும் அடிப்படை மதிப்புகளையும் ஏற்காதவர்களுக்கு நாட்டின் கதவுகள் திறந்திருக்காது” என்று Angus Taylor எச்சரித்துள்ளார். தற்போதைய குடியேற்றத் திட்டத்தில் தரநிலைகள் தளர்ந்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகள் மீது அதிக […]

உலகம்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தயாராகும் ஈரான்!!

  • February 16, 2026
  • 0 Comments

ஈரான், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக தெஹ்ரானை சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். இது இரு தரப்பினருக்கும் பொருளாதார நன்மைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் நாளைய தினம்  ஜெனீவாவில்  இடம்பெறவுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பிராடிஸ்லாவாவில் (Bratislava) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இராஜதந்திரம் […]

விளையாட்டு

இலங்கை, ஆஸ்திரேலியா இன்று மோதல்!

  • February 16, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் பலம்பொருந்திய இரு அணிகள் இன்று (18) பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை Sri Lanka மற்றும் ஆஸ்திரேலியா Australia அணிகள் மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு கண்டி , பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ண தொடரில் தான் எதிர்கொண்ட முதல் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும். சிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு, அடுத்த சுற்று தொடர்பான எதிர்பார்ப்பை […]