இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டு தொடக்கம்
இந்தியா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், மும்பையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மும்பையில் உள்ள லோக் பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பிரான்ஸ் தூதுக்குழுவினரும் இந்திய தரப்பில் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், கர்நாடகாவின் வேமகலில் டாடா ஏர்பஸ் தொழிற்சாலையில் H125 என்ற எடை குறைந்த ஹெலிகொப்டர் தயாரிப்பை கூட்டாக தொடங்கிவைத்தனர். பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டை நாங்கள் தொடங்கியுள்ளோம் […]













