இலங்கை

சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்!

  • October 18, 2023
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19.10) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாவாகும். இதேவேளை, உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 545 ரூபாவாகும். ஒரு கிலோ பச்சை பீன்ஸ் விலை […]

பொழுதுபோக்கு

லியோ இடைவெளி நேரம் குறைப்பு… தியேட்டர் ஓனர்கள் அதிரடி தீர்மானம்

  • October 18, 2023
  • 0 Comments

விஜய் நடித்துள்ள லியோ படம் காலை 9 மணிக்கே பல திரையரங்குகளில் 5 காட்சிகள் என ஒட்டுமொத்த ஷோக்களும் லியோ.. லியோ.. லியோ என போட உள்ள நிலையில், இரவு வரை அதிகப்படியான ஷோக்களை போட வேண்டி இருப்பதால் இடைவேளை நேரத்தை குறைப்பதாக தியேட்டர் ஓனர்கள் எல்லாம் ஒன்று கூடி முடிவெடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போ தியேட்டரில் விற்க தயாராக வைத்துள்ள பாப் கார்ன், பப்ஸ் எல்லாம் ஊசிப் போயிடுமே என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்ப, உட்கார்ந்திருக்கும் […]

இலங்கை

பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

பனாகொட சமகி மாவத்தையில் பதினொரு வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குறித்த மாணவி சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று (18) கொடகம பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

மத்திய கிழக்கு

நைஜீரியா அரசு நடத்திய பிரம்மாண்ட மணவிழா; 1,800 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் !

  • October 18, 2023
  • 0 Comments

நைஜீரியாவில் அரசு நடத்திய திருமண விழாவில் 1,800 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நைஜீரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு காதலர்கள் தங்கள் திருமணத்திற்கான செலவுகளை கூட மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு அரசு மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகள் இணைந்து பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 13ம் திகதி வட நைஜீரியாவில் உள்ள கனோ மாகாணத்தில், […]

ஐரோப்பா

காசா மருத்துவமனை மீது தாக்குதல் ; இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையம் கண்டனம்

  • October 18, 2023
  • 0 Comments

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 12 வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக, இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை 4,200ஐ கடந்துள்ளது. போருக்கு நடுவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து […]

இலங்கை

நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் ஊழியர்கள்

  • October 18, 2023
  • 0 Comments

நிரந்தர நியமனம் வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் தற்காலிகமாக வேலை செய்யும் ஊழியர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக நிரந்தர நியமனம் இன்றி தற்காலிகமாக தற்காலிகமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றி வருகின்றோம். தற்போதைய வாழ்க்கை செலவுக்கு தமது தற்காலிக வேலைக்காக வழங்கப்படும் வேதனம் போதாது. தங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் முன் வர வேண்டும் எனக் கோரி பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

இலங்கை

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

  • October 18, 2023
  • 0 Comments

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இணையவழி முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (18.100 உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், நாடாளுமன்றக் குழுவின் போது திருத்தங்கள் முன்வைக்கப்பட உள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார். குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி சுமார் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன திறந்த நீதிமன்றில் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த மனுக்கள் […]

இலங்கை

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை தூதரகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை1

  • October 18, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணான  அனுலா ஜயதிலகவின் சடலம் இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரஜையின் அனைத்து சலுகைகளும் அந்நாட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர் . காமினி செனரத் யாப்பா, “அவருடைய உடலை இலங்கைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலிய பிரதமர் பொய்களை பரப்பி வருவதாக பாலஸ்தீன் குற்றச்சாட்டு!

  • October 18, 2023
  • 0 Comments

காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொய்களைப் பரப்பி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த தாக்குதலில் 500 பேர் வரையில் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமுற்றுள்ளனர். அத்துடன் உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், குண்டுவெடிப்பு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவு என்று ஹமாஸ் கூறியது. இஸ்ரேலின் இராணுவம் குற்றச்சாட்டுகளை மறுத்தது.  மற்றும் பாலஸ்தீனிய போராளிகளின் […]

இலங்கை

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

  • October 18, 2023
  • 0 Comments

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (17.10) இரவு 8.45 மணியளவில் கந்தளாய்  கல்மதியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபரின்  சடலம் அதே புகையிரதத்தில் கந்தளாய் புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர் பலருடன் சேர்ந்து வயல்களில் வேலை செய்ததாகவும், வேலையை முடித்துவிட்டு ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தியபோது குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 34 வயதுடைய இரண்டு […]