உலகம்

07 வயது மகனை பறிதவிக்க விட்டுவிட்டு மலையேற்றத்தில் ஈடுபட்ட தந்தை

ஜப்பானில் தனது மகன்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த தந்தையொருவர் தனது இரண்டாவது மகனை தனியே விட்டுச் சென்ற சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

மலையேற்றம் செய்ய முடியாத அளவுக்கு மிகவும் சோர்வடைந்த ஏழு வயது சிறுவன் ஒருவனை, அவனது 48 வயது தந்தை ஃபூஜி மலையில் தனியாக விட்டுச் சென்றுள்ளார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,490 மீட்டர் உயரத்தில் உள்ள ஆறாவது நிலையத்தில் குறித்த சிறுவன் தனியாக காத்திருந்ததாகவும், பின்னர் அங்கிருந்த நபர் ஒருவர் சிறுவனுக்கு அடைகளம் கொடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தந்தையை கண்டுப்பிடித்ததுடன், மகனை அழைத்துவருமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஒரு குழந்தையைத் தனியாக விட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறி, ஜப்பானிய பொலிஸார் தந்தையைக் கண்டித்துள்ளனர்.

மேலும், தந்தை தனது செயல்களுக்காக “மிகவும் வருந்துவதாக”க் கூறியதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்