பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பரினகொச்சேஸ் ( parinacochas ) மாகாணத்தில் உள்ள உபஹசோ ( Upahuacho ) என்ற நகரில் இருந்து 38 கி.மீ தூரத்திலும், 66 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஐகா, ஆர்கியுபா ஆகிய நகரங்களில் பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர்? மீட்பு பணிகளின் நிலவரம் என்ன? போன்ற விவரங்கள், வெளியாகவில்லை.
இதேவேளை இதற்கு முன்பு, கடந்த 2007-ஆம் ஆண்டு, 7.9 என்ற ரிக்டர் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




