செய்தி

சிங்கப்பூரில் அறை ஒன்றை சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – புக்கிட் மேரா வியூவில் உள்ள வீடு ஒன்றில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பிளாக் 117 புக்கிட் மேரா வியூவில் அமைந்துள்ள வீட்டில் நடந்துள்ளது. அங்கு சடலம் கண்டெடுக்கப்பட்டகாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மரணம், நேற்று நவம்பர் 4 ஆம் திகதி காலை […]

இலங்கை

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய தேசிய புலனாய்வு பிரிவு

  • November 5, 2023
  • 0 Comments

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். புதிய புலனாய்வுப் பிரிவினூடாக பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கூறுகிறார். மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், “இந்த ஆண்டு தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் தேசிய கேடட் கார்ப்ஸ் (National Cadet Corps) இணைந்து சமூக புலனாய்வு […]

ஐரோப்பா

சுவிட்ஸர்லந்தில் ஏலத்தில் வரும் உலகில் மிகவும் அரிய வைரம் – வெளியான சிறப்பு அம்சம்

  • November 5, 2023
  • 0 Comments

சுவிட்ஸர்லந்தின் Blue Royal என்ற வைரம் 50 மில்லியன் டொலர் வரை விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் மிகவும் அரிய வைரங்களில் அதுவும் ஒன்று எனக் கருதப்படுகிறது. அதன் அளவு 17.6 கேரட் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய நீல வைரம் ஏலத்தில் விடப்படுவது இதுவே முதல்முறையாகும். இம்மாதம் 7ஆம் திகதி ஜெனீவா நகரில் குறித்த வைரம் ஏலத்தில் விற்கப்படும் என கூறப்படுகின்றது. அதோடு மற்ற பல அரிய நகைகளும் ஏலத்திற்கு வருகின்றன. பிரபல ஹாலிவுட் நடிகை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணத்தை பெற்றுக் கொள்பவர்களின் மோசடி அம்பலம்

  • November 5, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொண்டே மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். மோசடிகளில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொண்டு மேலதிகமான வருமானத்தை பெற்ற மோசடிகளில் ஈடுப்பட்டவர்களுடைய எண்ணிக்கை கடந்த ஆண்டு 165 971 பேர் என்று புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமூக உதவி திணைக்களானது 9.1 மில்லியன் தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததாகவும், இவ்வாறு ஒப்பிட்டும் பொழுது சில ஓய்வு ஊதிய பணத்தை பெறுகின்ற நிலையில் சமூக உதவி […]

ஐரோப்பா

பிரான்ஸில் மர்ம கொலை மிரட்டலால் அச்சம்!

  • November 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் – Nanterre நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலை ஒன்றுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய பள்ளிவாசலும், இஸ்லாமிய கல்வி நிலையமும் அமைந்த Ibn Badis எனும் பாடசாலைக்கே இந்த கொலை மிரட்டல் கடந்தவாரத்தில் விடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 29 ஆம் திகதி அன்று குறித்த பாடசாலை நிர்வாகம் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார். முஸ்லிம்களின் வழிபாட்டுத் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு அளவுக்கு அதிகமான குடியேற்றவாசிகள் அழைத்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு

  • November 5, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிற்கு வரம்பற்ற புலம்பெயர்ந்தோரை வரவழைத்து பல நெருக்கடிகளை உருவாக்கி வருவதாக One Nation கட்சி குற்றம் சாட்டுகிறது. தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் வீட்டு நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இந்த பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வரவு செலவு திட்ட 2023-24 நிதியாண்டில் 315,000 புலம்பெயர்ந்தோரின் ஒதுக்கீட்டை முன்மொழிந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் 413,530 பேர் பல்வேறு விசா வகைகளின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp அறிமுகம் செய்யும் மற்றுமொரு புதிய வசதி

  • November 5, 2023
  • 0 Comments

வாட்ஸ் அப் பீட்டா பதிப்பை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. தற்போது வரை பயனர்கள் வாட்ஸ் அப்பில் வரும் வீடியோக்களை அவர்களின் விருப்பம் போல பார்வேர்ட் மற்றும் ரீவைண்டு செய்து பார்க்க முடியாது. ஆனால் தற்போது கொடுத்துள்ள புதிய அப்டேட்டில், வீடியோக்களை பயனர்கள் அவர்களின் விருப்பம் போல பார்வேர்ட் அல்லது பேக்வேர்ட் செய்யும் பட்டனை சேர்த்துள்ளனர். […]

இலங்கை

நேபாள பூகம்பத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பா – தூதரகம் வெளியிட்ட தகவல்

  • November 5, 2023
  • 0 Comments

நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள பூகம்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என காத்மண்டுவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதியிலிருந்து வெகுதொலைவிலேயே வாழ்கின்றனர் என தூதரகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் வசிக்கின்றனர் இவர்களில் 40 மாணவர்கள் பொக்காராவிலும் பத்துபேர் காத்மண்டுவிலும் வாழ்கின்றனர் என தூதரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் காத்மண்டுவிலேயே வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது. வருடாந்தம் பெருமளவு இலங்கையர்கள் […]

மத்திய கிழக்கு

போர் எதிரொலி – இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

  • November 5, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-காஸா போருக்கு எதிரான விமர்சனங்கள் இஸ்ரேலுக்கு உள்ளேயும் வலுத்து வரும் நிலையில் பிரதமர் நெட்டன்யாஹுவுக்கு மக்களுக்கு ஆதரவு குறைந்துள்ளது. பிரதமர் கையாளும் விதத்தை 7 சதவீதம் மட்டுமே ஆதரிப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஹமாஸின் திடீர்த் தாக்குதலைத் தடுக்கத் தவறிய வேவுத்துறையின் குறைபாடுகளுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூசல் முடிவுக்கு வந்த பிறகு திரு. நெட்டன்யாஹு கணிசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். போருக்குப் பிறகு அவரோ அவரது அரசாங்கமோ […]

வட அமெரிக்கா

அமெரிக்காவிற்கு நுழைய முயன்ற இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

  • November 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவிற்கு நுழைய முயன்ற 97 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நுழைய முயன்ற இந்த இந்தியர்களில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் தரவுகளுக்கமைய, 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2019- 2020ஆம் ஆண்டுகளில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட, இது 5 மடங்கு அதிகம் ஆகும். […]