பொழுதுபோக்கு

அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் டைட்டில் வின்னர்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார் என்பதும் தெரிந்ததே. ஆனால் ஒரு கட்டத்தில் பிரதீப் ஆண்டனி மக்கள் ஆதரவு அதிகரிப்பதை உணர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டு அவரை சதி செய்து வெளியேற்றி விட்டனர். இந்த சதியில் கமல்ஹாசனும் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டதாக பலரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் பிரதீப்பை வெளியேற்றிவிட்டால் நாம தான் வெற்றியாளர் என்று நினைத்த மாயா […]

ஐரோப்பா

அல்பேனியாவில் குடியேறும் மையங்களை உருவாக்கும் இத்தாலி

பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளை தங்க வைப்பதற்காக அல்பேனியாவில் இரண்டு மையங்களை இத்தாலி கட்டும் என்று பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். ரோமில் அல்பேனிய பிரதமர் எடி ராமாவுடனான செய்தி மாநாட்டில் அவர் திட்டத்தை அறிவித்தார். இந்த மையங்கள் – அடுத்த வசந்த காலத்தில் திறக்கப்படுவதால் – ஆண்டுக்கு 36,000 பேர் வரை செயலாக்க முடியும் என்று மெலோனி கூறியுள்ளார். “பாரிய சட்டவிரோத குடியேற்றம் என்பது எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடும் தனியாக சமாளிக்க முடியாத ஒரு […]

இலங்கை

“ஊழல் கிரிக்கெட் அதிகாரிகளை பாதுகாக்கும் சக்திவாய்ந்த நபர்” அர்ஜுன ரணதுங்க

இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல் அதிகாரிகளுக்கு அரசாங்கத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சக்தி வாய்ந்த நபர் ஆதரவளிப்பதால் கிரிக்கெட் விளையாட்டு மேலும் அழிக்கப்படும் என இலங்கையின் முன்னாள் உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட்டின் (SLC) இடைக்கால குழுவின் தலைவராக ரணதுங்க நியமிக்கப்பட்டார், ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் குழுவின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. செய்தியாளர்களிடம் பேசிய ரணதுங்க, கிரிக்கெட் பற்றி எந்த அறிவும் இல்லாத […]

இலங்கை

பிரித்தானியாவில் அவசரமாக கூடும் கோப்ரா கூட்டம்!

  • November 7, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தாக்கம் குறித்த அவசர கூட்டத்தை பிரித்தானியா இன்று (07.11) நடத்தவுள்ளது. “இஸ்ரேல் மற்றும் காஸாவின் நிலைமைக்கு அரசாங்கத்தின் பதிலை ஒருங்கிணைக்க துணைப் பிரதமர் ஒரு கோப்ரா கூட்டத்தை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் சமூக ஒற்றுமை குறித்த முக்கிய விடயங்கள், போர் குறித்த சமீபத்திய அவதானிப்புகள் குறித்து ஆராயப்படவுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

பொண்ணியில் ‘இனி இவருக்கு பதில் இவர்’

  • November 7, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பொன்னி தொடர். அதில் வைஷு சுந்தர், சபரிநாதன் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர். மேலும் ஷமிதா ஸ்ரீகுமார் தொடரில் ஜெயலட்சுமி என்ற ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்தார். பெங்காலியில் பிரபலமான Gaatchora என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் பொன்னி. தற்போது நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் பொன்னி தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அவருக்கு பதிலாக இனி சிந்துஜா தான் ஜெயலட்சுமி […]

வட அமெரிக்கா

கனடா- ஆம்போல்ட் ஏரி பனி நீரில் மூழ்கி மூவர் பலி..!

  • November 7, 2023
  • 0 Comments

கனடாவில் பணி நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சஸ்கட்ச்வான் பகுதியில் அமைந்துள்ள ஆம்போல்ட் ஏரியில் கடந்த சனிக்கிழமை (5) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனி கட்டிகளினால் மூடப்பட்டிருந்த குளம் ஒன்றில் ஐந்து பேர் மேல் பகுதியில் நின்றிருந்த வேளையில், சிறுவர்களில் இருவர் திடீரென பனி பாறை உடைந்து நீருக்கு அடியில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்பதற்கு இரண்டு ஆண்கள் முயற்சித்த போது அவர்களும், பெண்ணும் நீரில் மூழ்கியுள்ளனர். இவ்வாறு பணி […]

உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி தனது ஈரானிய சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். னக்கும் மற்ற கைதிகளுக்கும் மருத்துவ சேவையில் வரம்புகள் மற்றும் ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டிய கடமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் 51 வயதான மூத்த உரிமை ஆர்வலர் முகமதி, “ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக” அக்டோபர் மாதம் நோபல் பரிசு பெற்றார்  

இலங்கை

தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஆமர் வீதி

  • November 7, 2023
  • 0 Comments

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆமர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆமர் வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியின் ஊடாக பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

ஆசியா

முதியவர்களுக்கான வீடியோ கேமை அறிமுகப்படுத்திய ஜப்பானிய மூதாட்டி!

  • November 7, 2023
  • 0 Comments

ஜப்பானை சேர்ந்த 87 வயது மூதாட்டி ஒருவர், வீடியோ கேமை அறிமுகப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சாதனை படைப்பதற்கும், எந்தவொரு விடயங்களை புதிதாக கற்றுக் கொள்ளவும் வயது ஒரு தடையில்லை என்றே சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானை சேர்ந்த 87 வயதுடைய மசாகோ வகாமியா என்ற பெண் ஒருவர் 43 வருடங்கள் வரை வங்கியில் பணியாற்றியுள்ளார். பின்பு, தனது 60 வயதில் இருந்து கம்ப்யூட்டர் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். மூதாட்டியான […]

இலங்கை

இலங்கையில் தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்ய நடவடிக்கை!

  • November 7, 2023
  • 0 Comments

நாளை முதல் வரும் 10 ஆம் திகதிவரை  மூன்று நாட்களுக்கு அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (07.11) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.