இலங்கை

இலங்கை : திருத்தியமைக்கப்பட்ட பெறுமதி சேர் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை!

  • December 12, 2023
  • 0 Comments

திருத்தியமைக்கப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரைவாளர்களால் திருத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை திருத்துவதற்கு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 01, 2024 முதல், வரிக்கு […]

ஐரோப்பா

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமா் ரிஷி சுனக்

  • December 12, 2023
  • 0 Comments

கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா். கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தாா். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போரீஸ் ஜான்சன் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தாா். மேலும், கொரோனா பேரிடா் காலத்தில் அரசு எடுத்த […]

ஆசியா

ஆப்கானிஸ்தால் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

  • December 12, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகாத நிலையில், மதிப்பீடு பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஆசியா

பாகிஸ்தானில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழப்பு!

  • December 12, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைப்படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் ஏறக்குறைய 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல் துறையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் சிவிலியன் உடையில் இருந்ததாகவும், அவர்கள் இராணுவத்தினரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இலங்கை

இலங்கை புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் கைது!

  • December 12, 2023
  • 0 Comments

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று (11.123) பிற்பகல் சுமார் 139 கைதிகள் தப்பிச் சென்றதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 102 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 37 கைதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாகவும்  மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். முகாமில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த […]

பொழுதுபோக்கு

“என் காதல் தடையாக இருந்தது… பிரேக் அப் செய்துவிட்டேன்” பிரபல நடிகை பேட்டி

  • December 12, 2023
  • 0 Comments

சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ், போன்ற சீரியல்களின் நடித்த நடிகை லாவண்யா முதல் முறையாக தன்னுடைய காதலனுடன் பிரேக் அப் செய்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீப காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் பல தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த லாவண்யாவும் ஒருவர். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது படிப்பை முடித்த லாவண்யா, கை நிறைய சம்பளத்துடன் வங்கியில் பணியாற்றியவர். பின்னர் […]

அறிந்திருக்க வேண்டியவை

வீட்டின் நுழைவாயிலில் வைக்க கூடாத பொருட்கள்!

  • December 12, 2023
  • 0 Comments

ஒரு வீட்டு நிலை வாசல் என்பது தெய்வம் இருக்கும் இடம் என குறிப்பிடப்படுகிறது. இன்றும் புது வீடு கட்டுபவர்கள் நிலைவாசல் வைப்பதற்கு என்று ஒரு தினத்தை ஒதுக்குவார்கள். ஒரு வீட்டுக்குள் நாம் சென்றால் அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் அதில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை நம் வீட்டு முன் வைக்க கூடாது அது என்னென்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் ஒரு திருமணத்திற்கு சென்றால் அங்கு வரவேற்பவர்கள் நான்கு பேர் நின்று பன்னீர் தெளித்து […]

இலங்கை

இலங்கையில் 2 நாட்களில் 12 பேர் மாயம் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்

  • December 12, 2023
  • 0 Comments

கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது மாணவன், நாதகுடியிருப்பு தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவன், ஹட்டன் பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் யட்டயன வளர்ச்சி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயது சிறுமியும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் […]

பொழுதுபோக்கு

தனி ஒருவன் 2.. படத்தின் வில்லன் யார்? மாபெரும் வாரிசு நடிகருக்கு வலைவீச்சு

  • December 12, 2023
  • 0 Comments

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் வெளியாகி சுமார் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பெற்ற திரைப்படம் தான் “தனி ஒருவன்”. பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த பல ஆண்டுகளாக ரசிகர்கள் பலர் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்று கூறினால் அது தனி ஒருவன் திரைப்படத்திற்கு தான் இன்று கூறினால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக […]