மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை – நல்லி எலும்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட திருமணம்!
தெலங்கானாவில் நிச்சயதார்த்ததின் போது வழங்கப்பட்ட மட்டன் கிரேவில் நல்லி எலும்பு இல்லை என மணமகனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாம்பாத் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், ஜக்தியால் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக மணமகளின் வீட்டில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்தை பாரம்பரியமாகவும் ஆடம்பரமாகவும் நடத்த இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்களுக்கு அசைவ […]













