ஐரோப்பா செய்தி

நோர்வே மன்னர் King Harald V காலமானார்

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார்.

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார்.

ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக ஒஸ்லோவிலுள்ள அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரண்மனை கூரையில் பறந்த அரசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மன்னரின் மறைவுக்கு முந்தைய 24 மணிநேரத்தில், ராஜ குடும்ப உறுப்பினர்கள் அவரைச் நேரில் சென்று பார்த்ததுடன், பெருந்திரளான மக்கள் அரண்மனைக்கு வெளியே மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நோர்வேயிலேயே பிறந்த அந்நாட்டின் முதல் மன்னர் ஹாரால்ட் ஆவார். அவரது மறைவையடுத்து, அவரது 53 வயதான மகனான இளவரசர் ஹோகோன் (Haakon) புதிய மன்னராகப் பொறுப்பேற்கிறார்.

35 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த மன்னர் ஹாரால்ட், முடியாட்சியை நவீனமயமாக்கிய ஒரு பிரபல மற்றும் சீர்திருத்தத் தலைவராகச் சரித்திரத்தில் நினைவுகூரப்படுவார்.

அரச மரபுகளை உடைத்து ஒரு சாதாரணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட அவர், நோர்வேயின் மிகவும் கடினமான தருணங்களில் நாட்டை ஒன்றாக இணைத்த ஒரு முக்கிய சக்தியாக விளங்கினார்.

மன்னர் ஹாரால்ட் எளிமையானவர், அனைவராலும் மதிக்கப்பட்டவர் மற்றும் அன்புக்குரியவர் என்று அரச குடும்பத்து மூத்த பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், அவரது தந்தையான மன்னர் 5ஆம் ஒலாவ் (King Olav V) அழைக்கப்பட்டதைப் போலவே, இவரும் நாட்டின் “தாத்தா” என்றும் “மக்களின் மன்னர்” என்றும் வர்ணிக்கப்பட்டார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒஸ்லோ மற்றும் உட்டோயா தீவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, நோர்வே மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், “பயத்திற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது” என்றும் மன்னர் ஹாரால்ட் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சமீபகாலமாக, மன்னர் ஹாரால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு ஆரோக்கியச் சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி