இலங்கை செய்தி

மில்லியன் கணக்கான முட்டைகளுடன் இலங்கை வரும் கப்பல்

6 மில்லியன் இந்திய முட்டைகளை ஏற்றி வரும் கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பான சுகாதார அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், நாடு முழுவதும் உள்ள சதொச பல்பொருள் அங்காடிகளுக்கு முட்டைப் பங்குகளை எதிர்வரும் வியாழக்கிழமை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில், நாடு முழுவதும் உள்ள கடைகளுக்கு கிட்டத்தட்ட எட்டு மில்லியன் இந்திய முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நுகர்வோருக்கு மட்டுமே இந்திய முட்டைகளை வாங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் பேக்கரி உரிமையாளர்கள் குறைந்த விலையில் உள்ளூர் முட்டைகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும் என அரச வர்த்தக பல்வேறு நியதிச்சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர மேலும் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை