கொடூரமான தாக்குதலால் உயிருக்கு போராடும் இளைஞர் – நீதிக்குப் போராடும் தாய்
ஹிக்கடுவ, வெள்ளவத்தை பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி பல மாதங்களாக எதுவும் செய்ய முடியாமல் தவித்துள்ளார். நவஞ்சன சந்தகெலும் 18 வயதுடைய இளைஞன் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஹிக்கடுவ நகரில் வைத்து நவாஞ்சனாவை சிலர் இவ்வாறு தலையில் தாக்கியுள்ளனர். தாக்குதலால் நவஞ்சனாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் எதுவும் செய்ய முடியாமல் கடும் நோய்வாய்ப்பட்டுள்ளார். […]













