பெலியத்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் டுபாயில் கைது
பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்த உரகஹா மைக்கல் மற்றும் பௌஸ் ஹர்ஷா மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் உள்ளூர் பொலிஸாரால் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. […]













