ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கோர விபத்து – கடமையில் இருந்த 27 வயது பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

  • March 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஸ்வான்லியில் அவசர அழைப்புக்கு பதிலளித்து கொண்டிருந்தபோது இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஃபார்னிங்ஹாமில் (Farningham,) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் வாகனமும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது. 27 வயதான பிராட்லி கோர்க் (Bradley Cork) என்ற அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். அதே வாகனத்தில் இருந்த மற்றொரு பொலிஸார் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு நீதவான் பிறப்பித்த உத்தரவு

  • March 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் […]

உலகம் செய்தி

அதிரடியாக குறைவடைந்த தங்கத்தின் விலை – மேலும் குறையும் என எதிர்பார்ப்பு

  • March 22, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (22) கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,494.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 68.02 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நாணயச் சந்தையில் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) வட்டி விகிதம் தொடர்பான […]

இலங்கை செய்தி

அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன

  • March 22, 2026
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் அரிசியின் விலை கணிசமாக அதிகரிக்கும். மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால், நுகர்வோர் அதிக விலைக்கு மீன்களைக் கொள்வனவு செய்ய […]

இலங்கை செய்தி

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானம்

  • March 22, 2026
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தாமதக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 350% முதல் 400% வரையான அளவில் அதிகரிக்கக்கூடும் என அந்த […]

ஐரோப்பா செய்தி

ஈரானை வன்மையாக கண்டிக்கிறோம் – தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு 22 நாடுகள் வலியுறுத்தல்

  • March 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்க ஈரானுக்கு 22 நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. பாதுகாப்பான பயணம் சர்வதேச சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து, […]

இலங்கை செய்தி

மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு!

  • March 22, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை (23) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை எச்சரித்துள்ளது.

இலங்கை செய்தி

எரிபொருளை பதுக்குபவர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை!

  • March 22, 2026
  • 0 Comments

எரிபொருளையும், மின்சாரத்தையும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் நாளை முடிவுக்கு வந்தால்கூட எரிசக்தி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் எரிபொருள் சார்ந்த பிரச்சினை இருக்கவே செய்யும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ எரிபொருள் மற்றும் மின்சாரத்தை நாம் அனைவரும் சிக்கனமாக – […]

இலங்கை செய்தி

“வடக்கை ஆள்வோம்: முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்” – சுமந்திரன்

  • March 22, 2026
  • 0 Comments

“ஆளும் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி, JVP நாட்டை ஒருகட்சி முறைமையை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது.” இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் M. A. Sumanthiran தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலின்போது எமது கட்சியின் ITAK முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நான் விரும்புகின்றேன். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைப்பதற்கு […]