வட அமெரிக்கா

அமெரிக்கா-மோட்டல் அறையில் இருந்து கேட்ட பெண்ணின் அலறல் …பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 3, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில் மோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. டெட்ராய்ட் நகரில் இருந்து 32km தொலைவில் அமைந்த இந்த மோட்டலின் அறை ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனை கவனித்த மிச்சிகன் பொலிஸார் உடனடியாக சென்று அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதில், அந்த அறையில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரருகே, துப்பாக்கி, போதை பொருட்கள் மற்றும் பல செல்போன்கள் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

இலங்கை

பற்றி எரிந்த பாடசாலை கட்டிடம் : மாணவர்களுக்கு நேர்ந்த கதி!

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ.விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் பாடசாலை சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பா

16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஏழு வயது சிறுமி பலி

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் ஏழு வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்ததாக பிரான்சின் நோர்ட் டிபார்ட்மெண்ட் தெரிவித்துள்ளது. படகு “இவ்வளவு பேரை ஏற்றிச் செல்வதற்கு ஏற்ற அளவில் இல்லை” என்று உள்ளூர் அதிகாரசபை ஒரு அறிக்கையில் கூறியது, கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆ கால்வாயில் மக்கள் ஏறியவுடன் அது கவிழ்ந்தது. மேலும் மூன்று குழந்தைகளுடன் பயணித்த சிறுமியின் பெற்றோர் டன்கிர்க்கில் உள்ள மருத்துவமனைக்கு […]

இலங்கை

நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

நாளைய தினம் (04) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல், மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே போதுமான அளவு நீர் அருந்துவது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற […]

பொழுதுபோக்கு

நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்… தீயாக பரவும் தகவல்

  • March 3, 2024
  • 0 Comments

நடிகை ரெஜினா கசாண்ட்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சென்னையில் உள்ள உமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் படிக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இவர், கடந்த 2005 ஆம் ஆண்டு, வெளியான ‘கண்ட நாள் முதல்’ என்கிற திரைப்படத்தில், ஒரு சிறிய ரோலில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். […]

ஆசியா

உக்கிரமடையும் போர் : காசாவில் ஆறு நிமிடங்களுக்குள் சுமார் 50 இலக்குகள் மீது தாக்குதல்

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு காசா நகரமான கான் யூனிஸில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. விமானப்படை மற்றும் பீரங்கிகள் ஆறு நிமிடங்களுக்குள் சுமார் 50 இலக்குகளைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. “தாக்குதல்களின் போது, ​​துருப்புக்கள் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தன மற்றும் நகர்ப்புறங்களில் சிவிலியன் வசதிகளில் இருந்து செயல்படும் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்தனர்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

புதுக்குடியிருப்பில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று (03.03.2024) காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் குருபூசை தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அறநெறி பாடசாலை மாணவர்களது நடனத்துடன் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையடிக்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் க.முத்துலிங்கம் தலைமையில் முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நிகழ்வுகள் பாடசாலை, அறநெறி மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் […]

இலங்கை

கொழும்பில் 9 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

  • March 3, 2024
  • 0 Comments

கொழும்பில் ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது 9 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் சந்தைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கொழும்பு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​இந்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா

உக்ரைன் மீதான இராணுவப் பேச்சுக்களில் கசிவு : ஜெர்மனி தீவிர விசாரணை

உக்ரைன் போர் குறித்த இரகசிய இராணுவப் பேச்சுக்களின் ‘மிகவும் தீவிரமான’ கசிவு குறித்து ரஷ்ய சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது தொடர்பில் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவின் அரச ஆதரவு ஆர்டி சேனலின் தலைவரான மார்கரிட்டா சிமோனியன் பெப்ரவரி 19 அன்று ஜேர்மன் இராணுவ அதிகாரிகள் எனக் கூறிய 38 நிமிட ஆடியோ பதிவை கிரிமியா மீதான சாத்தியமான தாக்குதல்கள் பற்றி விவாத ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளது. பதிவில், ஜேர்மனியால் தயாரிக்கப்பட்ட டாரஸ் ஏவுகணைகளை உக்ரேனியப் […]

பொழுதுபோக்கு

சர்ச்சைகளைப் குறித்து எனக்குக் கவலையில்லை… துணிச்சலுடன் ‘போர்’ பட நாயகி சஞ்சனா நடராஜன்!

  • March 3, 2024
  • 0 Comments

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ஆண்டனிதாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் கதாநாயகனாக நடித்துள்ள ‘போர்’ திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சஞ்சனா நடராஜன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கலையரசனுக்கு ‘லிப்லாக்’ மொத்தம் கொடுத்து, லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் இந்த சஞ்சனா அழகாக தமிழ் பேசி, தொடந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் ‘மல்டி ஸ்டாரர்’ படங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் சஞ்சனா நடராஜன். இந்த ஆண்டின் ஹிட் படங்களில் […]