பொழுதுபோக்கு

நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்… தீயாக பரவும் தகவல்

நடிகை ரெஜினா கசாண்ட்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சென்னையில் உள்ள உமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் படிக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இவர், கடந்த 2005 ஆம் ஆண்டு, வெளியான ‘கண்ட நாள் முதல்’ என்கிற திரைப்படத்தில், ஒரு சிறிய ரோலில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்த போதிலும், தமிழில் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ரெஜினா… கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்த கருங்காப்பியம், காஞ்சுரிங் கண்ணப்பா, போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது.

33 வயதை எட்டி விட்ட நடிகை ரெஜினாவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. அதன்படி ரெஜினா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இதுவரை ரெஜினா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கிட்ட தட்ட இந்த திருமண தகவல் உறுதியானது என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவதால் இந்த ஆண்டு ரெஜினியா திருமணத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் ரெஜினா சில நடிகர்களின் காதல் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். நடிகர் சாய் தரம் தேஜா காதலிக்கப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அது வதந்தி என தெரியவந்தது.

இதை தொடர்ந்து, நடிகர் சந்தீப் கிஷனை காதலித்தாக செய்தி பரவிய நிலையில், சந்தீப் ரெஜினா தன்னுடைய தோழி மட்டுமே என கூறி அந்த செய்தியை பொய்யாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content