உலகம் செய்தி

போரின் கோர முகம்: ஈரானில் 208 குழந்தைகள் பலி!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 208 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ஈரானின் அவசரக்கால சேவைத் துறை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர் தொடங்கியவேளை மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 சிறுமிகள் பலியாகியுள்ளனர். போரால் ஈரானில் 1,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்!

  • March 24, 2026
  • 0 Comments

சுயநலவாதிகளின் சதிக்கு இடம் கொடுக்காது நீதியை தரவேண்டும் – யாழில் ஆசிரியர்கள் போராட்டம்! வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை இன்று (24) முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில். – “8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களை […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு குறித்து யாழ்.கட்டளைத் தளபதியுடன் ஆளுநர் ஆராய்வு!

  • March 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது என ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய […]

உலகம்

கொலம்பியாவில் பரபரப்பு: இராணுவ வீரர்களுடன் பறந்த விமானம் விபத்து

  • March 24, 2026
  • 0 Comments

கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான C-130 Hercules ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொலம்பிய இராணுவ வீரர்கள் மற்றும் வான்படை ஊழியர்களை ஏற்றிச் சென்ற இந்த விமானம், பெரு (Peru) எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகளின் போது இதுவரை 66 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 114 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்ததாக கொலம்பியா வான்படைத் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: ஈரானிடம் தென்கொரியா விடத்துள்ள கோரிக்கை!

  • March 24, 2026
  • 0 Comments

தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்குப் போரால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தென்கொரியா வெளிவிவகார அமைச்சர் சோ ஹியுன் Cho Hyun வெளியிட்டார். அத்துடன், பதற்றத்தைத் தணிக்குமாறு ஈரானுக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi, இடம் கோரிக்கை விடுத்தார். அங்கு சிக்கியுள்ள தென் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: ஏப்ரல் 9 சபையில் விவாதம்!

  • March 24, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. நாடாளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி […]

இலங்கை செய்தி

26 ஆம் திகதி இலங்கை வருகிறது ரஷ்ய தூதுக்குழு: பின்னணி என்ன?

  • March 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று நாளை மறுதினம் 26 ஆம் திகதி இலங்கை வருகின்றது. ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான குழுவே கொழும்பு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் மேற்படி குழுவினர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர். மேற்காசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பின்னணியில் ரஷ்ய குழுவின் […]

இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

  • March 24, 2026
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க […]

ஆஸ்திரேலியா செய்தி

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா இணக்கம்!

  • March 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையில் நீண்டகால பேச்சுக்கு பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தேச ஒப்பந்தமானது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வயின் மற்றும் இறைச்சி போன்ற முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரிச் சுமைகளைக் குறைக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குப் பதிலீடாக ஐரோப்பியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை நீக்கவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை வழங்கவும் ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது. வர்த்தகத்தைத் தாண்டி, பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் […]

பொழுதுபோக்கு

25 நாட்களை கடந்து வசூல் வேட்டையாடும் தாய் கிழவி!

  • March 24, 2026
  • 0 Comments

தாய் கிழவி திரைப்படம் வெளியான 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இப்படம் வெளியானத்தில் இருந்து விமர்சண ரீதியில் பாராட்டுக்களை பெற்று வருகின்றது. தற்போது, தாய் கிழவி திரைப்படம் வெளியான 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. வசூலுடன் சேர்த்து இந்தப் படம் […]