israel-to-continue-strikes-on-iran-until-further-notice உலகம்

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர இஸ்ரேல் முடிவு

  • March 24, 2026
  • 0 Comments

ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்களுக்கு நிறுத்தி வைத்த போதிலும், மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர இஸ்ரேலிய இராணுவம் முடிவு செய்துள்ளது. அரபு ஊடக நிறுவனமான அல் ஜசீராவின் இணையதளத்தின்படி, ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த முடிவைப் பாராட்டவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை. அல் ஜசீரா […]

உலகம் ஐரோப்பா

துருக்கியில் கோர விபத்து: சுவிட்சர்லாந்து தமிழர்கள் மூவர் உயிரிழப்பு

  • March 24, 2026
  • 0 Comments

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாயாரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சுவிற்சர்லாந்திற்குத் திரும்புவதற்காக விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60 வயது),அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28 வயது) மற்றும் அவா்களுடன் பயணித்த சிவாஸ்கரன் சுகந்தி (47 வயது): ஆகியோரே உயிரிழந்துள்ளனா். உயிரிழந்த ஜெயநந்தினி […]

இந்தியா செய்தி

போர் பதற்றங்களுக்கு மத்தியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

  • March 24, 2026
  • 0 Comments

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க, நாளை ( 25) மாலை 05 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்காப்புத் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப் படைத் தளபதி ஏர் […]

இலங்கை

மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி இளம் பெண் நடனம்: கைது செய்யுமாறு உத்தரவு

  • March 24, 2026
  • 0 Comments

கொழும்பில் நடைபெற்ற “ரோயல் அவுருது குமரி” தெரிவு விழாவின் போது, மலைப்பாம்பு ஒன்றினை கழுத்தில் சுற்றிக்கொண்டு நடனமாடிய பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள ‘ரோயல் மார்க்ஸ் அரினா’ (Royal Marks Arena) வளாகத்தில் ஆடை அலங்காரக் கலைஞர் […]

உலகம் செய்தி

“எரிசக்தி நெருக்கடி”: பிரித்தானிய அமைச்சரின் மாற்று யோசனை!

  • March 24, 2026
  • 0 Comments

தற்போதைய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பெட்ரோலியப் பொருட்களைச் சார்ந்து இருப்பதை விட தூய்மையான எரிசக்திக்கு மாறுவதே சிறந்தது என்று எரிசக்தி அமைச்சர் Michael Shanks தெரிவித்தார். வீடுகளின் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நீண்ட காலப் பாதுகாப்பிற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களே சரியான தீர்வாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் கட்டப்படும் அனைத்து புதிய வீடுகளிலும் சூரிய ஆற்றல் தகடுகள் மற்றும் வெப்ப ஏற்றிகள் பொருத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. […]

பொழுதுபோக்கு

சரிகமபவில் ஈழத்து வர்ஜாவுக்கு நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

  • March 24, 2026
  • 0 Comments

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரம், ஈழத்து குயில் வர்ஜாவுக்கு நடுவர் ஸ்ரீனிவாஸ் frame ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் Dedication சுற்று நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக Dedication சுற்றில் பாடல் பாடியிருந்தனர். அந்த வகையில் வர்ஜா தனது சகோதரிகளுக்காக பாடல் பாடினார். அவர் பாடுவதற்கு முன்பு, “தங்கைகளுக்கு தான் இன்னொரு அம்மா. அவர்களை காணாமல் இருப்பது கவலையாக இருக்கின்றது. நான் இறுதி மேடைக்கு வந்த பிறகு […]

இலங்கை செய்தி

இந்தியாவில் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்!

  • March 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு நேற்றையதினம் அறுவடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றையதினம் வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய பயிரான […]

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்’ – இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம்!

  • March 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 35 ஆயிரத்து 330 பேரும், பிரிட்டனில் இருந்து 12 ஆயிரத்து 599 பேரும், ரஷ்யாவில் இருந்து 11 ஆயிரத்து 927 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]

இலங்கை செய்தி

ஈரானுக்காக தங்கம் வழங்கிய காஷ்மீர் மக்கள்!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, காஷ்மீர் மக்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர். பணம் முதல் தங்கம் வரை தாராளமாக நன்கொடைகளை அவர்கள் வழங்கி உள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மக்களுக்கு ஆதரவாக, காஷ்மீரின் பட்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கத் தொடங்கியுள்ளனர். ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு […]

உலகம் செய்தி

போரின் கோர முகம்: ஈரானில் 208 குழந்தைகள் பலி!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 208 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ஈரானின் அவசரக்கால சேவைத் துறை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர் தொடங்கியவேளை மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 சிறுமிகள் பலியாகியுள்ளனர். போரால் ஈரானில் 1,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.