இலங்கை கல்வி

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்குகிறது ADB!

  • March 24, 2026
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை […]

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்தவுக்கு பிணை

  • March 24, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றில் விடயங்களைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் […]

sri-lanka-protest-against-anura-kumara-dissanayake-government-may-2026 இலங்கை

அநுர அரசுக்கு எதிராக மே மாதம் எதிர்ப்பு பேரணி

  • March 24, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இயலுமையானது, மாதத்தில் மூன்று தடவைகள் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் வெளிப்படுவதாக முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விமர்சித்துள்ளார். எனவே, அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பாரிய ஊழல் காரணமாகவே இன்று டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கு எதிராக […]

iran-military-readiness-missile-launch-israel-conflict-2026 உலகம்

இழப்புகள் ஈடுசெய்யப்படும் வரை போர் ஓயாது – ஈரான் அறிவிப்பு

  • March 24, 2026
  • 0 Comments

ஈரானின் இழப்புகள் ஈடுசெய்யப்படும் வரை போர் ஓயாது என்று அயதுல்லா மொஜ்தபா கமேனியின் ஆலோசகரான மொஹ்சென் ரெசாயி கூறுகிறார். அனைத்துத் தடைகளும் நீக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் தாக்குதல்கள் நடைபெறாது என்றும் உலகளாவிய உத்தரவாதங்களைக் கோரப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த முறை அமெரிக்கா இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று மொஹ்சின் ரெசாயி கூறினார். முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், பேச்சுவார்த்தையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். […]

உலகம் செய்தி

ஈரான் தாக்குதல்கள் – ஐ.நா மனித உரிமைகள் மன்றில் அவசர விவாதம்

  • March 24, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் நாளை புதன்கிழமை அவசர விவாதம் நடத்தவுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் மற்றும் ஜோர்டான் சார்பில் பஹ்ரைன் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த விவாதம் நடைபெறுகிறது என மன்றம் தெரிவித்துள்ளது. இந்த அமர்வின் போது, பஹ்ரைன், ஜோர்டான், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய […]

joe-kent-criticizes-israel-foreign-policy-iran-conflict உலகம்

ஈரான் விவகாரத்தில் சதி? வெளிவந்த பகிர்த்தகவல்

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் இயக்குநரான ஜோ கென்ட், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார். ஈரானுடனான போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு பதவி விலகிய ஜோ கென்ட், பதட்டங்களைக் குறைப்பதற்கான முதல் படி இஸ்ரேலியர்களைத் தடுப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார். இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளும் இதே பாதையில் தொடரும் என்று அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைப்பதற்காக டெல் அவிவ் […]

உலகம் செய்தி

வளைகுடா நாடுகளும் ஈரானும் இணைந்து வாழ்வதே ஒரே வழி – கட்டார்

  • March 24, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகளும் ஈரானும் எதிர்காலத்தில் இணைந்து வாழ்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அல்-அன்சாரி (al Ansari) தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் இந்தப் பிராந்திய மக்களுக்கிடையே ஆழமான வரலாற்று மற்றும் சமூக பிணைப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். “ஈரான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு உள்ளது. இந்தப் பிராந்திய மக்களும் அதேபோன்று […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பொருளாதார சவால் – விரைவான பதிலுக்கு நிதியமைச்சர் தயாராகிறார்

  • March 24, 2026
  • 0 Comments

போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அவர் ஆற்றவுள்ள உரையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையின் உள்நாட்டு தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது உரை மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில், போர் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த சுருக்கமான விளக்கம் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, […]

உலகம் செய்தி

லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் -பல வீடுகள் சேதம்

  • March 24, 2026
  • 0 Comments

லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், முக்கியமான பாலமொன்றும் இலக்குவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. களப்பணியாளர்கள் வழங்கிய தகவலின்படி, லெபனானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹெர்மல் (Hermel) பகுதியில் வான்வழித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, டல்ஃபா (Talfa) பாலம் மீதும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

batticaloa-police-station-investigation-murder-case-suspects-arrested இலங்கை

மட்டக்களப்பு கொலை வழக்கு: சிக்கிய சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை!

  • March 24, 2026
  • 0 Comments

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கியதுடன் அவர்களிடம் நகைகளை கொள்வனவுசெய்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை வவுணதீவு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நெல்லியடி வயல் பிரதேச கிணற்றினுள் வீசப்பட்டதும், […]