ஆசியா

பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியத்தில் இரு வீரர்கள் பலி

  • April 12, 2024
  • 0 Comments

பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக சாங்கி விமான நிலையத்தில் இருந்து கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி கேவிட் சிட்டியில் உள்ள ஒரு சந்தைப்பகுதி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். […]

ஆசியா

சீனாவின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

  • April 12, 2024
  • 0 Comments

சீனாவின் ஏற்றுமதிகள் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வளர்ச்சியடைந்த பின்னர் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கொரோனா தொற்றில் இருந்து  நாட்டின் மீட்சியின் சீரற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சுங்கத் தரவுகளின்படி மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 7.5% குறைந்துள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி 1.9% சரிந்தது. ஜனவரி-பிப்ரவரி காலத்தில், ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 7.1% உயர்ந்தது, இறக்குமதி 3.5% உயர்ந்தது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, மார்ச் மாதத்தில் $58.55 பில்லியன் […]

இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

  • April 12, 2024
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியைக் காண்பிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான மந்த நிலைக்கு பின்னர் இந்த நிலைமையைக் காட்டுவதையே இது காட்டுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இந்த நாட்டின் பொருளாதாரம் 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். தொடர்புடைய பிரசுரத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 2 சதவீதம் மற்றும் 5 பத்தில் ஒரு […]

இலங்கை

இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • April 12, 2024
  • 0 Comments

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை

திருகோணமலையில் புதையல் தோண்டிய 13 பேர் கைது!

  • April 12, 2024
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (11) 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் ரத்னபுர, கேகாலை மற்றும் தெவனிபியவர பகுதிகளில் வசித்து வரும் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 13 […]

பொழுதுபோக்கு

ரோமியோ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • April 12, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் 1,2, கோடியில் ஒருவன் என தொடர்ந்து நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் ரோமியோ. நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் கதாநாயகியாக இளம் நடிகை மிர்னாலினி ரவி நடிக்க துணை கதாபாத்திரங்களில் ஷா ரா, […]

இலங்கை

STF அதிகாரி மீது தாக்குதல்: மன்னார் பெரிய கரிசல் பிரதேச இளைஞன் கைது

  • April 12, 2024
  • 0 Comments

குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் புதன்கிழமை (11) மாலை நடைபெற்றது. குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர். இதன் போது குறித்த […]

இலங்கை

மில்லியன் கணக்கான டொலர்களை கொள்வனவு செய்யும் இலங்கை மத்திய வங்கி!

  • April 12, 2024
  • 0 Comments

மார்ச் 2024 இல் இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஆசியா

30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல தென் கொரிய பாடகி!

  • April 12, 2024
  • 0 Comments

தென் கொரிய பாடகி பார்க் போ ராம் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 30. அவரது மரணம் தென் கொரிய இசைத் துறையையும் கொரியன் பாப் இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த பாடகி பார்க் போ ராம் தனது மயக்கும் இசை மற்றும் பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்த ஆண்டு இசைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்ய இருந்த பார்க் தனது 30 […]

ஆசியா

பசியோடு இருக்கும் கரடிகளால் ஆபத்து – ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை

  • April 12, 2024
  • 0 Comments

ஜப்பானில் பசியோடு இருக்கும் கரடிகள் மக்களைத் தாக்கக்கூடும் என ஜப்பானின் சுற்றுப்புற அமைச்சு, எச்சரிக்கை விடுத்துள்ளது. இளவேனிற்காலம் பிறந்ததும் குளிர்கால உறக்கத்திலிருந்து கரடிகள் திரும்பும். அப்போது அவற்றால் ஆபத்து நேரக்கூடும். நேற்று அது குறித்துப் பேச சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் அமைப்புகளும் கூடின. கரடிகள் காடுகளிலிருந்து வெளியே வருவது குறித்து மாநிலங்களுக்கு அறிக்கை வெளியிட அவை முடிவு செய்துள்ளன. சென்ற ஆண்டு கரடி தாக்கியதில் 6 பேர் பலியாயினர். சுமார் 220 பேர் காயமடைந்தனர். தோஹோகு (Tohoku) வட்டாரம் […]