ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணம் பெறுபவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 14, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவி பணமானது வருட ஆரம்பத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக்குரிய உபகரணங்களை வேண்டுவதற்காக 12 சதவீதமான உயர்ச்சியை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது பாடசாலை மாணவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொள்ளகின்றார்கள். இவ்வாறு பெற்றக்கொண்டால் தங்களது பாடசாலை உபகரணங்களை வேண்டுவதற்காக மொத்தமாக 195 யுரோக்களை இவர்கள் சமூக உதவி திணைகளத்தில் விண்ணப்பம் செய்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் இவ்வாறு பாடசாலைக்கு செல்லும் பொழுது முதலாவது […]

ஐரோப்பா

தோல்வி அடையும் அபாயத்தில் உக்ரைன்

  • April 14, 2024
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தோல்வி அடையும் அபாயம் இருப்பதாக பிரித்தானிய கூட்டுத் தளபத்தியத்தின் முன்னாள் தலைமைத் தளபதி கூறியிருக்கிறார். ஜெனரல் சர் ரிச்சர்ட் பேரன்ஸ் வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். தோல்வி அடைந்துவிடுவோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் பிறகு உக்ரைனிய வீரர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் என அவர் கூறினார். இன்னமும் அந்த நிலை வரவில்லை என்றாலும் இப்போதைக்கு ரஷ்யாவின் கரம் மிகவும் ஓங்கியுள்ளது. ஆயுதம், படைபலம், போர் உத்தி ஆகியவை ரஷ்யாவுக்குச் சாதகமாக உள்ளன. ஐந்துக்கு ஒன்று […]

செய்தி

இலங்கையில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு

  • April 14, 2024
  • 0 Comments

இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இன்று மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி இது அமைந்துள்ளது. இதன்படி 14,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விசேட அதிரடிப்படையின் 500 பேர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 400 இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்காக 15,806 சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அறிவியல் & தொழில்நுட்பம்

மருத்துவத்துறையில் புரட்சி – மருந்துகளைப் பரிந்துரைக்கும் AI

  • April 14, 2024
  • 0 Comments

Oxford பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள Drug-GPT என்ற புதிய AI கருவி, மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அவற்றை நிர்வகிக்கவும், நோயாளிகள் மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்களுக்குத் தெரியப்படுத்தவும் தகவல்களை வழங்குகிறது. மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அல்லது பிற சுகாதார நிபுணர்கள் நோயாளியின் நிலைமைகளை இந்தக் கருவியில் உள்ளிடுவது மூலமாக, சரியான மருந்துகளைத் தேர்வு செய்ய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி, சரியான மருந்துகளைதான் பரிந்துரைக்கிறோமா என்பதை மருத்துவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். Drug-GPT வெறும் மருந்துகளை […]

ஆசியா செய்தி

மலேசியா விமான நிலையத்தில் பதற்றம் – துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்

  • April 14, 2024
  • 0 Comments

மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்தச் சம்பவம் இரவு 1.30 மணியளவு முனையம் ஒன்றின் வருகை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. சிலாங்கூர் (Selangor) மாநிலத்தின் காவல்துறை தலைவர் அந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். சந்தேக நபர் இருமுறை சுட்டிருக்கிறார். அவற்றில் ஒரு தோட்டா உள்ளூரைச் சேர்ந்த தனிப்பட்ட பாதுகாவலரைத் தாக்கியது. அதற்கு பிறகு சந்தேக நபர் தப்பினார். பாதிக்கப்பட்டவருக்குக் கடும் காயம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய பிறகு சந்தேக நபர் தம்முடைய மனைவியைச் சுட […]

ஆன்மிகம்

தமிழ் புத்தாண்டு குரோதி வருடப் பலன்கள்

  • April 14, 2024
  • 0 Comments

பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்களை சுருக்கமாக…. மேஷம்: இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருவும், பன்னிரண்டில் ராகுவும், ஆறில் கேதுவும் பதினொன்றாம் வீட்டில் சனி பகவானும் இருக்கிறார்கள். குடும்ப விவகாரங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்தேறும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் கட்டும் பாக்கியம் கிடைக்கும். இரண்டு மூன்று வழிகளிலும் இன்கம் வரும். எனவே, செலவு பற்றிய பயம் இருக்காது. முன் எப்போதோ கொடுத்து மறந்துபோயிருந்த […]

ஆஸ்திரேலியா

சிட்னி தாக்குதல் – சந்தேக நபரின் அடையாளத்தை கண்டுபிடித்த பொலிஸார்

  • April 14, 2024
  • 0 Comments

சிட்னி கிழக்கு பொன்டாய் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று பிற்பகல் கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட நபரின் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதான ஜோயல் கௌச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரின் தாக்குதலில் ஒன்பது மாதக் குழந்தையின் தாய் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். சந்தேக நபர் கடந்த மாதம் குயின்ஸ்லாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸுக்கு குடிபெயர்ந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் உதவி பொலிஸ் ஆணையாளர் அந்தோனி குக் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல்-ஈரான் மோதல் – பாய்ச்சப்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் இஸ்ரேல்

  • April 14, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஈரான் பாய்ச்சிய ஆளில்லா விமானங்கள் ஜெரூசலத்தில் (Jerusalem) சுட்டு வீழ்த்தப்படுகின்றன. உள்ளூர் நேரப்படி இரவு 1.45 மணி அளவில் அவற்றை இஸ்ரேல் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. நகரம் முழுவதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள தமது நாடு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது பல ஆளில்லா விமானங்களை ஏவுகணைகளையும் பாய்ச்சியிருப்பதாக ஈரான் அறிவித்தது. ஈரானின் தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் உச்ச-விழிப்பு நிலையில் இருப்பதாக […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் காதலிக்கு தமிழர் செய்த அதிர்ச்சி செயல்

  • April 14, 2024
  • 0 Comments

  சிங்கப்பூரில் காதலியை அடித்துக்கொன்றதை கிருஷ்ணன் என்ற தமிழர் ஒப்புக்கொண்டுள்ளார். 40 வயதாகும் கிருஷ்ணன் ஏற்கெனவே திருமணமானவர் எனவும் அவர் 2019ஆம் ஆண்டு பலமுறை தாக்கிக் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 40 வயது சிங்கப்பூரர் மல்லிகா பேகம் ரஹாமான்ஸா அப்துல் ரஹ்மான் என்பவரையே கொலை செய்துள்ளர். கிருஷ்ணன் மல்லிகாவை 2015ஆம் ஆண்டு சந்தித்தார். அப்போது முதல் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளனர். எனினும் மல்லிகா மற்ற ஆண்களுடன் பழகுவது கிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் மதுபோதையில் இருந்தபோது கிருஷ்ணன் […]

இலங்கை செய்தி

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் – பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரம்

  • April 14, 2024
  • 0 Comments

இலங்கை வந்த கப்பல் அமெரிக்காவில் பால்ட்டிமோர் பாலத்தின் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல்கள் கடந்துசெல்லப் பாதையை மீண்டும் திறந்துவிடுவதற்கான முயற்சியாக அது அமைந்துள்ளது. பாரந்தூக்கிகள் இடிபாடுகளை அகற்றும் புதிய படங்களை அமெரிக்கக் கடலோரக் காவற்படை வெளியிட்டுள்ளது. மார்ச் 26ஆம் திகதி டாலி சரக்குக் கப்பல் மோதிப் பாலம் இடிந்தது. இதுவரை கப்பலின் 36 கொள்கலன்கள் அகற்றப்பட்டுவிட்டன. நீரில் மூழ்கிய சாலை இடிபாடுகளைப் பகுதி பகுதியாக உடைக்கும் பணி தற்போது […]