இலங்கையில் வீதிவிபத்துக்களால் 10 பேர் பலி!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 08 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 விபத்துக்களில் 05 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.













