மத்திய கிழக்கு

சரியான நேரத்திற்காக காத்திருக்கும் இஸ்ரேல்

ஈரானுக்கு பதிலடி கொடுப்பதற்காக சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த தாக்குதல்களுக்குச் சரியான நேரம் வரும்போது அதனைப் பொறுப்பேற்கச் செய்யப்போவதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

பிரச்சினை மோசமடைவதைத் தவிர்க்குமாறு அனைத்துலகச் சமூகம் நெருக்குதல் அளிக்கும் நிலையில் இஸ்ரேல் அவ்வாறு கூறுகிறது.

இஸ்ரேல் மேலும் தவறிழைத்தால் பதிலடி இதைவிட மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்திருந்தது.

இஸ்ரேலை நோக்கி ஈரான் 300க்கும் அதிகமான வானூர்திகளையும் ஏவுகணைகளையும் பாய்ச்சியது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரான் பாய்ச்சியவற்றில் 99 விழுக்காடு தகர்த்தப்பட்டன என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏப்ரல் முதலாம் தேதி சிரியாவில் உள்ள தெஹ்ரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலுக்கு அது பதிலடி என்று ஈரான் கூறியது. அந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக நம்பப்படுகிறது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.