உலகம் செய்தி

ஆங்கில கால்வாயில் பெரும் துயரம் – அகதிகளை ஏற்றிய படகு விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழப்பு

  • April 9, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையிலான ஆங்கில கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என நால்வர் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் ‘டாக்ஸி-போட்’ (Taxi-boat) வகை படகு விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஈக்விஹென்-பிளாஜ் மற்றும் ஹார்டெலோட்-பிளாஜ் (Equihen-Plage and Hardelot-Plage) இடையே உள்ள பூலோன் கடற்கரைப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், குறைந்தது 42 பேர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய படகில் ஏற முயன்றபோது, […]

ஐரோப்பா செய்தி

விவசாயத்தில் விஷம் – பிரித்தானியாவில் கிளைபோசேட் எதிர்ப்பு அலை உயர்வு

  • April 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய விவசாயத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘கிளைபோசேட்’ (Glyphosate) களைக்கொல்லியின் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. 1980 களில் ஸ்கொட்லாந்து விவசாயிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, இன்று பிரித்தானியா முழுவதும் ஆண்டுக்கு 2,200 டொன்னுக்கும் அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலக சுகாதார நிறுவனம் இதனை ‘புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணி’ என 2015 ஆம் ஆண்டிலேயே […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!

  • April 9, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் எதிராக வாக்களித்தன. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்குரிய தீர்மானம்மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, பிறகு வாக்கெடுப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா செய்தி

புதுச்சேரி,கேரளா மற்றும் அசாமில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு பதிவு

  • April 9, 2026
  • 0 Comments

கேரளாவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 62.71% வாக்குகளும், அசாமில் 75.91% வாக்குகளும், புதுச்சேரியில் 72.40% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். இதன்படி, 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 70 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். […]

உலகம்

மத்தியக் கிழக்கில் இருந்து விமான சேவைகள் எப்போது தொடங்கும்?

  • April 9, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பஹ்ரைனிலிருந்து விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என கல்ஃப் ஏர் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற முக்கிய மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் படிப்படியாக தங்கள் செயல்பாடுகளை மீட்டெடுத்து வருகின்றன, ஆனால் சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கும் நேரடி விமானப் பாதைகளை மீண்டும் தொடங்குவதற்கும் கால அவகாசம் தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே  ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் […]

உலகம்

போர் நடவடிக்கை – ஈரானில் 3000இற்கும் மேற்பட்டோர் மரணம்!

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஈரானில் சுமார் 3000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அரச ஊடகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் 40% பேரை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தடயவியல் பணிகள் தேவைப்பட்டதாக   ஈரானின் தடயவியல் தலைவர் அறிவித்துள்ளார்.  

ஐரோப்பா

நேட்டோவில் பிரித்தானியாவிற்கு ஏற்படும் பின்னடைவு : கருவூலத்துறையால் எழுந்த சர்ச்சை!

  • April 9, 2026
  • 0 Comments

சர்வதேச நாடுகள் மத்தியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரித்தானியாவின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்கள் கருத்துக்கூற மறுத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் கருவூலத்திற்கும் இடையே நிதி ஒதுக்கீடு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சையே இதற்கு  காரணம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கெமி பேடனோக் (Kemi Badenoch) மற்றும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் தேசி ( Tan Dhesi) ஆகியோர், இத்திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், இது […]

உலகம் செய்தி

தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு மேலும் பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தாக்குதலை […]

இலங்கை செய்தி

விவசாயத்துறைக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்!

  • April 9, 2026
  • 0 Comments

“உலகில் எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படாதிருப்பதற்கு எமது விவசாயிகளின் உன்னதமான அர்ப்பணிப்பே காரணமாகும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது. அதன்பின்னர் மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரத்தம், […]

உலகம் செய்தி

லெபனானில் 24 மணிநேரத்துக்குள் இத்தனை பேர் பலியா?

  • April 9, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. 1000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலால் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்றும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்திவருகின்றது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.