ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் முற்றுகையில் பிரித்தானியா பங்கேற்காது

  • April 12, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தலைமையிலான முற்றுகையில் பிரித்தானியா ஈடுபடாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தப் பகுதியில் சுங்கக் கட்டணம் விதிக்கப்படக் கூடாது என்றும், கடல்வழிப் பயண சுதந்திரத்தை உறுதி செய்வதே முக்கியம் என்றும் கூறினார். மேலும், ஹார்முஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருக்கவும், உலகப் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கவும் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்காக, பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து கடல்வழிப் பாதுகாப்புக்கான பரந்த கூட்டணியை […]

உலகம் செய்தி

ஒப்பந்தம் சாத்தியமில்லை‌- அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா சர்வதேச சட்டங்களுக்கு இணங்க செயல்படாதவரை, அதனுடன் எந்த ஒப்பந்தமும் எட்டக்கூடிய நிலையில் இல்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடைபெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலில், இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியதாக ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

செய்தி தமிழ்நாடு

விஜயின் அதிரடி அறிவிப்பு – சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 05 இலட்சம் ரூபா உடனடி நிவாரணம்

  • April 12, 2026
  • 0 Comments

மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை 8,000 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பல்வேறு திட்டங்கள் அறிவித்தார். இதன்போது சிறை பிடிக்கப்படும் படகுகள் மீட்கப்படும் வரை படகு பாதுகாப்பு நிதியாக 05 இலட்சம் ரூபா உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என கூறினார். கடல்தாய் வீட்டு வசதித் திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தவெக தலைவர் […]

உலகம் செய்தி

லெபனானில் போர் பதற்றம் தீவிரம்

  • April 12, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் லெபனானில் போர் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பெய்ரூட் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களுக்கு உலகளாவிய கண்டனங்கள் எழுந்த பின்னர், இஸ்ரேல் தலைநகரை நோக்கிய தாக்குதல்களை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தெற்கு லெபனானில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைய தாக்குதல்களில் மேலும் சில மருத்துவ உதவியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் கடுமையாக கண்டித்து, சுகாதாரப் பணியாளர்கள் திட்டமிட்டு இலக்கு […]

ஐரோப்பா

200 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்படும் தங்கக் கழுகுகள்!

  • April 12, 2026
  • 0 Comments

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தங்கக் கழுகுகள் மீள்வருகையை மேற்கொள்ளவுள்ளன. இந்நிலையில்  குறித்த பறவையை பிரித்தானிய வனவிலங்குகளில் அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய   சுமார் 01 மில்லியன் நிதியை அறிவித்துள்ளது. இந்த நிதியுதவியானது, கடந்த வாரம் சுற்றுச்சூழல் துறையால் அறிவிக்கப்பட்ட £60 மில்லியன் இனங்கள் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒரு காலத்தில் இங்கிலாந்து முழுவதும் சாதாரணமாகக் காணப்பட்ட இந்த பறவை, விக்டோரியன் செம்மறி ஆடு உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. உச்ச […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு – நெருக்கடியில் அரசாங்கம்!

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்த நிலையில், “ஈரானில் நடக்கும் போரினால் பிரித்தானிய குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் இழப்புகள் ஏற்படும்” என நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) எச்சரித்துள்ளார். இழப்புகளின் அளவு தெரியவில்லை என்றாலும், தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் மக்களிடம் வெளிப்படையாகப் பேசப் போகிறேன்.  ஈரானில் நடக்கும் போர், பிரிட்டிஷ் குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 11 புகலிட ஹோட்டல்கள் அதிரடியாக மூடப்படுகின்றன

  • April 12, 2026
  • 0 Comments

இந்த நாடாளுமன்ற காலத்திற்குள் அனைத்து புகலிட விடுதிகளையும் மூடுவதாக அளித்த உறுதியின் ஒரு பகுதியாக, இந்த வாரம் 11 ஹோட்டல்கள் மூடப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு புகலிடம் கோருவோருக்குத் தங்குமிடமாக ஹோட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அது தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. சிலர் இங்கு ஆடம்பர வாழ்க்கை வழங்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளனர். அரசாங்க தகவலின்படி, தற்போது சுமார் 200 ஹோட்டல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 30,000 பேர் தங்கியுள்ளனர். […]

உலகம் முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற அமெரிக்க படைகளுக்கு உத்தரவு!

  • April 12, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு சுங்கம் செலுத்திய ஒவ்வொரு கப்பலையும் தேடிப்பிடித்து இடைமறிக்குமாறு நமது கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று கூறியுள்ளார். “ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைய […]

ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்!

  • April 12, 2026
  • 0 Comments

ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் போர்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக, உக்ரைனும் ரஷ்யாவும் நேற்று தலா 175 போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொண்டுள்ளன. இந்தப் பரிமாற்றத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ரஷ்யச் சிறையிலிருந்து 175 ராணுவ வீரர்களையும் ஏழு பொதுமக்களையும் உக்ரைனுக்கு அழைத்து வந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)  தெரிவித்தார். உக்ரேனிய பாதுகாப்பு உளவுத்துறைப் பிரதிநிதியான ஆண்ட்ரி யூசோவ், விடுவிக்கப்பட்டவர்களில் 163 பேர் 2022 முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார். […]

ஐரோப்பா செய்தி

பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் – பிரித்தானியா, ஓமான் தலைவர்கள் எச்சரிக்கை

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கக் கூடாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கும் வலியுறுத்தியுள்ளனர். இரு தலைவர்களும் அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து தொலைபேசி வழியாக கலந்துரையாடியதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றியும் அவர்கள் விவாதித்ததுடன், இரு தரப்பினரும் விரைவில் ஒரு தீர்வை அடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், போர் நிறுத்தம் தொடர்வதும் அனைத்து தரப்பினரும் மேலும் […]