ஹார்முஸ் முற்றுகையில் பிரித்தானியா பங்கேற்காது
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தலைமையிலான முற்றுகையில் பிரித்தானியா ஈடுபடாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தப் பகுதியில் சுங்கக் கட்டணம் விதிக்கப்படக் கூடாது என்றும், கடல்வழிப் பயண சுதந்திரத்தை உறுதி செய்வதே முக்கியம் என்றும் கூறினார். மேலும், ஹார்முஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருக்கவும், உலகப் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கவும் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்காக, பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து கடல்வழிப் பாதுகாப்புக்கான பரந்த கூட்டணியை […]













