கரீபியன் கடற்பகுதியில் படகு மீது தாக்குதல் – 03 பேர் பலி!
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்கக் கடல் பகுதிகளிலும் கிழக்கு பசிபிக் பெருங்கடலிலும் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறப்படும் கப்பல்களைக் குறிவைத்து டிரம்ப் நிர்வாகம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையினரின் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை குறைந்தது 181 பேர் உயிரிழந்துள்ளனர். ‘போதைப்பொருள் பயங்கரவாதத்தை’ எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் […]













