இந்தியா

டெல்லியில் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

  • February 17, 2025
  • 0 Comments

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் திகதி அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.அது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம், புதுடெல்லியை மையமாகக் கொண்டு, திங்கட்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் […]

ஐரோப்பா

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பிரித்தானியாஅழைப்பு

  • February 17, 2025
  • 0 Comments

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைனில் நீடித்த அமைதியைப் பாதுகாக்க உதவ ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ரஷ்யாவுடன் உடன்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஆதரிக்க பிரிட்டிஷ் வீரர்களை நாட்டிற்கு அனுப்புவதில் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். “நமது கண்டத்தின் கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒரு தலைமுறைக்கு ஒரு முறை நிகழும் தருணத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம்,” என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை விரைவுபடுத்துவதில் இங்கிலாந்து முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளது” என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.   […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இனி வரும் காலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!

  • February 17, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இனி வரும் மாதங்களில் வெப்பமான வானிலையை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 14C வெப்பமான வானிலையை எதிர்பார்க்க முடியும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குளிர் மற்றும் பனிமூட்டமான வானிலை இங்கிலாந்தின் பெரும்பகுதியைப் பாதித்த பிறகு, வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் பிப்ரவரி சராசரியான 6C மற்றும் தெற்கு இங்கிலாந்தில் 9C ஐ விட அதிகமாக இருக்கும் எனவும் முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

மத்திய கிழக்கு

காசாவின் மேற்கு கரையில் 1000 வீடுகளை கட்டுவதற்கான டெண்டரை அறிவித்த இஸ்ரேல்!

  • February 17, 2025
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்குக் கரையில் கிட்டத்தட்ட 1,000 கூடுதல் குடியேறி வீடுகளைக் கட்டுவதற்கான டெண்டரை இஸ்ரேல் வெளியிட்டதாக குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 974 புதிய வீட்டு அலகுகளின் மேம்பாடு எஃப்ராட் குடியேற்றத்தின் மக்கள் தொகையை 40% அதிகரிக்க அனுமதிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழுவின் குடியேற்ற கண்காணிப்பை வழிநடத்தும் ஹாகித் ஆஃப்ரான், ஒப்பந்த செயல்முறை மற்றும் அனுமதிகளை வழங்கிய பிறகு கட்டுமானம் தொடங்கலாம் என்றும், இது குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்றும் கூறினார். 500,000 […]

செய்தி

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்மொழிவு!

  • February 17, 2025
  • 0 Comments

இலங்கையில் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தனியார் துறைக்கான சம்பள உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச மாத சம்பளம் ஏப்ரல் 2025 க்குள் ரூ.21,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், ஜனவரி 2026 க்குள் ரூ.30,000 ஆகவும் அதிகரிக்க உள்ளது. இதற்கு முதலாளிமார் சங்கம் உடன்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீர் கனமழை,வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி; 39,000 வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு

  • February 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் திடீரென பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, 9 பேர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக கனமழை பெய்ததாகவும், குறிப்பாக கென்டக்கி என்ற பகுதியில் மட்டும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல […]

உலகம்

புதிய AI வசதியை வெளியிட தயாராகும் எலான் மஸ்க்

  • February 17, 2025
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய செல்வந்தர் எலான் மஸ்க் தமது xAI நிறுவனம் ‘Grok 3’ எனும் தானியக்க உரையாடல் வசதியை வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார். அது குறித்து அவர் X தளத்தில் பதிவிட்டார். பூமியில் ஆக ஆற்றல்வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியாக Grok 3 இருக்கும் என்று அவர் கூறினார். தவறுகளைச் சரிசெய்ய தரவுகளைப் பரிசீலிக்கும் ஆற்றலை Grok 3 கொண்டுள்ளது. சந்தையில் OpenAI’s ChatGPT, DeepSeek ஆகிய செயற்கை நுண்ணறிவு வசதிகள் இருக்கும் வேளையில் xAI போட்டித்தன்மையை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை – 2025ஆம் ஆண்டுக்கான செலவுத் திட்டம் (live)

  • February 17, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். அதற்கமைய, *தற்போது உள்ள சுங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சுங்க சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். * வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வணிக ஒத்துழைப்புக்குப் பயன்படுத்தவுள்ளோம். * முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல் * பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த நடவடிக்கை. * பொருளாதார சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை – வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம் (live)

  • February 17, 2025
  • 0 Comments

நிதி அமைச்சர் என்ற வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார். எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். “எமக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச தரப்பினருடன் வலுவான தொடர்புகளை பேணி முதலீட்டாளர்களுடன் […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்கா

  • February 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளத. ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 பேரும் கடந்த 5 ஆம் திகதி இந்தியா வந்தடைந்தனர். இந்த நிலையில், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரின் கை, கால்கள் கட்டப்பட்டது நாடாளுமன்றம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் நாடு கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் கிடையாது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் […]