டெல்லியில் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் திகதி அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.அது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம், புதுடெல்லியை மையமாகக் கொண்டு, திங்கட்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் […]













