ரஷ்யாமீது ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் : விமான நிலையங்களை மூடிய ரஷ்யா!
ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷ்ய விமான நிலையங்கள் இரவு முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் வான் பாதுகாப்பு பிரிவுகள் நேற்றிரவு அதன் பெல்கோரோட் எல்லைப் பகுதியில் 52 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. 88 ட்ரோன்கள் இரவு முழுவதும் ஏவப்பட்டதாகவும், எந்த பெரிய காயங்களோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் அது கூறுகிறது. உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் வோரோனேஜ், அஸ்ட்ராகான், கிராஸ்னோடர், ரியாசான் மற்றும் குர்ஸ்க் பகுதிகளிலும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். […]













