இலங்கை: தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு 2025 ஏப்ரல் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் தற்போது பிணையில் உள்ள தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். பிணை பெற்று நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயற்பட்டதாக தென்னகோன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரையும் […]













