ஐரோப்பா செய்தி

போப் லியோவிற்கு பரிசாக வழங்கப்பட்ட அரேபிய குதிரை

  • October 15, 2025
  • 0 Comments

வத்திக்கானில் வாராந்திர பொது கூட்டத்திற்கு முன்னதாக, போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் போப் லியோவிற்கு ஒரு வெள்ளை அரேபிய குதிரையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக மற்ற நன்கொடையாளர்கள் போப்பிற்கு ஒரு வெள்ளை மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு மின்சார காரை பரிசாக வழங்கியுள்ளனர். போலந்தின் கோலோப்ரெக்-புட்ஸிஸ்டோவோவில் (Kołobrzeg-Puczysztów) உள்ள மிச்சல்ஸ்கி ஸ்டட் பண்ணையின் (Michalski Stud Farm) உரிமையாளரும் நிறுவனருமான ஆண்ட்ரெஜ் மிச்சல்ஸ்கி (Andrzej Michalski), அரேபிய இனத்தைச் சேர்ந்த புரோட்டானை (Proton) போப்பிற்கு வழங்கினார். […]

உலகம் செய்தி

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க ஆலோசகர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ் (Ashley J. Tellis) கைது

  • October 15, 2025
  • 0 Comments

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகருமான (South Asian foreign policy consultant) ஆஷ்லே ஜே டெல்லிஸ் (Ashley J. Tellis), இரகசிய தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, வர்ஜீனியாவின் (Virginia) கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டின் (Carnegie Endowment) மூத்த ஊழியரும், டாடா மூலோபாய விவகாரங்களுக்கான (Tata Strategic Affairs) தலைவருமான 64 வயதான […]

இலங்கை செய்தி

முக அடையாளத்திற்காக விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி

  • October 15, 2025
  • 0 Comments

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இஷாரா உட்பட 6 பேர் கொண்ட குழு கடந்த 13ம் திகதி நேபாளத்தில் விசேட சுற்றிவளைப்பின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதன்படி அவரும் அவரது குழுவினரும் இன்று (15) மாலை 6.52 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானம் மூலம் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு […]

செய்தி விளையாட்டு

Women’s WC – DLS முறையில் 133 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து அணி

  • October 15, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 16வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. பாகிஸ்தானின் சிறந்த பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்கள் பெற்று இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் […]

உலகம்

48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்!

  • October 15, 2025
  • 0 Comments

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அதன்படி, இன்று (15) பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு இந்த போர் நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் இந்த போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக தலிபான் நிர்வாகம் கூறுகிறது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்து வரும் மோதல்களில் இதுவரை இரு தரப்பினரும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 200 […]

பொழுதுபோக்கு

பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்

  • October 15, 2025
  • 0 Comments

பழம்பெரும் பாடகி மற்றும் நடிகையான பாலசரஸ்வதி தேவி (வயது 97), வயது மூப்பினால் இன்று காலமானார். கடந்த 2 – 3 நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். “சதி அனுசுயா” எனும் திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான பாலசரஸ்வதி தேவி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 2,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இந்த நிலையில், பாடகி பாலசரஸ்வதி தேவியின் மறைவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி […]

இலங்கை

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி இலங்கை வந்தடைந்தார்!

  • October 15, 2025
  • 0 Comments

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இஷாரா உட்பட 6 பேர் கொண்ட குழு கடந்த 13 ஆம் திகதி நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவரை நாட்டிற்கு அழைத்துவரும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். இதன்படி அவரும் அவரது குழுவினரும் இன்று (15) மாலை 6.52 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL 182 […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை

  • October 15, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்க லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் நாணயக்காரவின் வழக்கறிஞர் ஆகியோர் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், […]

உலகம்

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் 8 பாலஸ்தீனர்களை பொது இடத்தில் சுட்டுக்கொன்ற ஹமாஸ்

  • October 15, 2025
  • 0 Comments

ஆயுதங்களை கைவிட ட்ரம்ப் எச்சரித்த நிலையில், பொதுவெளியில் 8 பேரை ஹமாஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ஆம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஹமாஸ் இன்னும் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,” நான் ஹமாசிடம் பேசினேன். அப்போது நீங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று […]

உலகம்

இந்தோனேசியாவில் (Indonesia) கப்பல் கட்டும் தளத்தில் விபத்து – பலர் உயிரிழப்பு!

  • October 15, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் (Indonesia)  பாட்டம் (Batam) தீவில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டான்ஜுன்குன்காங் (Tanjunguncang) துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்  பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தபோது எரிபொருள் டேங்கரில் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக மாகாண காவல்துறைத் தலைவர் அசெப் சஃப்ருதீன் (Asep Safrudin) தெரிவித்துள்ளார். […]