கருத்து & பகுப்பாய்வு செய்தி

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் மர்மம் – பல ரகசியங்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள ஆதாரங்கள்

  • October 25, 2025
  • 0 Comments

முதன்முறையாக நிலவின் இருண்ட பக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்தாண்டு சாங்’இ-6 (Chang’e-6) விண்கலத்தின் மூலம் நிலவில் இருந்து மண் பூமிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் சூரிய குடும்பம் உருவாவதற்கு முன்னைய காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் அரிய விண்கல்லின் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மிகவும் அரிய வகை விண்கல்லின் துண்டுகளை குவாங்சோ இன்ஸ்டிடியூட் ஒப் ஜியோகெமிஸ்ட்ரி (Guangzhou Institute of Geochemistry) தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் துண்டுகள் பொதுவாக சூரிய குடும்பத்தின் […]

உலகம் முக்கிய செய்திகள்

சிங்கப்பூர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நோய்த்தொற்று – சுகாதார பிரிவு எச்சரிக்கை

  • October 25, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் திடீரென சளிக்காய்ச்சல் (Flu) பரவல் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இந்தக் காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரிக்கின்றன. எனினும் இம்முறை வழமையை விட நோய்த் தொற்று முன்கூட்டியே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை சிங்கப்பூரில் மட்டும் இல்லை. அண்டை நாடுகளான ஜப்பான், மலோசியா போன்ற நாடுகளில் காணப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சளிக்காய்ச்சலுடன் […]

உலகம்

ஹமாஸிற்கு அதிகாரம் வழங்க முடியாது! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • October 25, 2025
  • 0 Comments

காசா (Gaza) பகுதியை ஹமாஸ் (Hamas) அமைப்பு தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (Secretary of State) மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய உயர்மட்ட அதிகாரி ஒருவரின் முக்கிய அரசியல் நிலைப்பாடாக, இந்த கூற்று வெளியாகிப் பேசுபொருளாக மாறியுள்ளது. காசாவின் எதிர்கால நிர்வாகம் தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். காசாவில் இனியும் ஹமாஸ் அமைப்புக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்க முடியாது என […]

உலகம் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதி’என அழைத்த பாகிஸ்தான் ஆளுநர்; சிரித்த மோஷின் நக்வி(Mohsin Naqvi)

  • October 25, 2025
  • 0 Comments

2025 ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியின் வெறியை அடக்க முடியாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதிகள்’ என்று பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி (Kamran Tessori) இழிவாகப் பேசியிருப்பது உலக அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்க மறுத்து, கோப்பையைத் தூக்கிக்கொண்டு சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியைப்(Mohsin Naqvi) பாராட்டி ஆளுநர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. அதில் […]

உலகம்

நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலிய சென்ற விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு

  • October 25, 2025
  • 0 Comments

நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. கிறிஸ்ட்சேர்ச்சில் இருந்து சிட்னி நகருக்கு சென்று கொண்டிருந்த NZ221 என்ற எயார் நியூசிலாந்து விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது. டாஸ்மன் கடல் மீது விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் ஹைட்ராலிக் (Hydraulic) மற்றும் ஸ்டீயரிங் (Steering) அமைப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டதாக எயார் நியூசிலாந்து நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட போதிலும், விமானிகள் திறமையாகச் செயற்பட்டு, விமானத்தை சிட்னியில் […]

உலகம்

வெனிசுலாவில்(Venezuela) வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் – இருவர் பலி

  • October 25, 2025
  • 0 Comments

வெனிசுலாவில்(Venezuela) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவின் டாச்சிரா(Táchira) மாகாணத்தின் பாராமில்லோ(Paramillo) விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு ஓடுதளத்தை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் விழுந்ததையடுத்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டு

சங்கக்காரவை முந்திச் செல்ல கோலிக்கு இன்னும் 54 ரன்கள் மட்டுமே தேவை

  • October 25, 2025
  • 0 Comments

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராகக் குமார் சங்கக்காரரை முந்திச் செல்ல இந்திய வீரர் விராட் கோலிக்கு இன்னும் 54 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. 51 சதங்கள் மற்றும் 74 அரைசதங்கள் அடித்த கோலி, தற்போது 304 போட்டிகளில் 14,181 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் குமார் சங்கக்கார ஆவார். இவர் 404 போட்டிகளில் 14,234 ரன்கள் எடுத்துள்ளார். சங்கக்கார ஓய்வு பெற்றபோது 25 சதங்கள் மற்றும் […]

இலங்கை

தாயகம் திரும்பிய எரித்திரியாவில்(Eritrea) தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கடற்படையினர்

  • October 25, 2025
  • 0 Comments

எரித்திரிய(Eritrea) கடற்பரப்பில் அத்துமீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்த ஆறு இலங்கை கடற்படையினர் மீட்கப்பட்டு நேற்றைய(24) தினம் தாயகம் திரும்பினர். எகிப்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் எரித்திரியா அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம், எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை கடற்படையினரை திருப்பி அனுப்புவதற்கு வெற்றிகரமாக உதவியுள்ளது. எரித்திரியாவிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற கெய்ரோவில்(Cairo) உள்ள இலங்கை தூதர் எரித்திரியாவின் தலைநகரான அஸ்மாராவில்(Asmara) தொடர்புடைய நடைமுறைகளை நேரில் கவனித்து, […]

உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள குழப்பம் – தவிக்கும் பயணிகள்

  • October 25, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள சம்பள முடக்க நிலை காரணமாக, விமான போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்தொகையான பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சுமார் 10 வெவ்வேறு விமான நிலையங்களில் பதிவான பயணத் தாமதங்கள் சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தன. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். விமான நிலையங்களில் மூன்றாவது வாரமாகவும் இந்த நெருக்கடி நிலை தொடர்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கமே இதற்கு பிரதான காரணம் என மத்திய விமானப் போக்குவரத்து […]

உலகம் செய்தி

காசாவில் தொடரும் பெரும் அவலம் – பசியால் வாடும் மக்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • October 25, 2025
  • 0 Comments

காஸாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிப் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. கிடைக்கும் நிவாரணப் பொருட்கள், அங்குள்ள மக்களின் தேவையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பூர்த்தி செய்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசுஸ் (Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், கூடுதல் உதவிகள் காஸாவுக்குள் செல்லத் தொடங்கியுள்ளன. எனினும் அங்குள்ள தேவையுடன் ஒப்பிடுகையில் […]