சவுதியின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து
சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோவின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சவூதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சம்பவத்தைக் கையாள்வதற்கான நடைமுறைகளை முடித்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை அது குறிப்பிடவில்லை.
ஜசான் சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 400,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து, பெட்ரோல் மற்றும் அல்ட்ரா-லைட் சல்பர் டீசல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.





