பொழுதுபோக்கு

மூன்று தமிழ் நடிகர்களை மோலிவுட்டுக்கு கூட்டிச்செல்லும் பகத் பாஸில்

தமிழ் சினிமாவில் பகத் பாஸில் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. அவர் நினைத்தால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து, இங்கு இருக்கும் ஹீரோக்களின் மார்க்கெட்டுகளை கீழே இறக்கி விடலாம்.

ஆனால் அவரோ இங்கிருந்து தன் மனதிற்கு நெருக்கமான ஹீரோக்களை மலையாள சினிமா உலகிற்கு கூட்டி செல்வதற்கு திட்டம் போட்டு விட்டார்.

தமிழ் சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்த பகத் பாஸிலை ஆரம்பத்தில் யாருப்பா இவரு, அட இவர தெரியலையா, இவர்தான் நம்ம நஸ்ரியா வீட்டுக்காரர் என்று தான் அவருடைய அறிமுகம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருந்தது.

ஆனால் தன்னுடைய நடிப்பினால் இப்போது நஸ்ரியாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது என தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாறி இருக்கிறது. வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட பகத் பாசிலுடன் இணைந்து நடித்த ஆசைப்படும் அளவுக்கு அவருடைய ரீச் இருக்கிறது.

ஜெய ஜெய ஹே படத்தின் இயக்குனர் அடுத்து பகத் பாசிலை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் தன்னுடன் இணைந்து நடிப்பதற்காக மூன்று தமிழ் ஹீரோக்களை பரிந்துரை செய்திருக்கிறார் பகத் பாசில்.

இதில் முதலிடத்தில் இருப்பவர் தான் நம்முடைய நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா. தமிழில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இப்போது தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் சமுத்திரகனி.

அந்த வகையில், நம் குட் நைட் பட ஹீரோ மணிகண்டன். மணிகண்டனின் நடிப்பு சமீபத்தில் பகத் பாசிலை ஈர்க்க, அவர் தற்போது தன்னுடைய படத்தில் மணிகண்டன் அடிப்பதற்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content