அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு!
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைந்த இரண்டு கப்பல்களை அமெரிக்கா குறிவைத்ததாகவும், ஈரானியப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரானிய இராணுவம் கூறியது.
அதேநேரம் ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாங்கள் சுட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது நிலமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரம் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு மற்றும் பிரதான நிலப்பரப்பில் உள்ள பந்தர் கமீர், சிரிக் ஆகிய அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் வான்வளித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





