ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியை சேர்க்க தீர்மானம்
2028 ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறை கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இப்போட்டியில் ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அணிகள் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டம் வாரியாக டி20 தரவரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகள் இப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது அணிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி 2027 ஆம் ஆண்டு நடைபெறும்.
அதேநேரம் போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், அதன் பெண்கள் அணிக்கு அதே வாய்ப்பு கிடைக்காது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஏனெனில், அந்த அணி சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.
மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒலிம்பிக் குழுவால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படாததால், இந்த வாய்ப்பை இழக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.




