பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கிண்ணம் வாங்க இந்திய அணி மறுப்பு
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வெற்றிக் கிண்ணத்தை – ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோசின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) பெற மறுத்துவிட்டது.
பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டத்திற்கான கிண்ணத்தை வழங்க நக்வி மற்றும் பிற அதிகாரிகள் மேடையில் காத்திருந்த போதிலும், இந்திய வீராங்கனைகள் அதைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
எனினும், இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் பங்கேற்று இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது.
முன்னதாக 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும், பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகவும் பதவி வகிக்கும் மோசின் நக்வி, பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் உள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வரும் அரசியல் பதற்றங்கள் காரணமாகவே, அவரிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியத் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.




