உலகம்

இரண்டாவது நாளாகவும் வான்வெளியை மூடியது சிசிலி – விமான சேவைகள் பாதிப்பு

சிசிலியின் எட்னா எரிமலையிலிருந்து புதிதாக வெளியேறிய சாம்பல் காரணமாக, வான்வெளி கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, சிசிலியின் கட்டானியா விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து “பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை அந்தந்த விமான நிறுவனங்களிடம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய எரிமலை வெடிப்பின் தாக்கம் சிசிலிக்கு அப்பாலும் உணரப்பட்டுள்ளது. எரிமலைச் சாம்பல் மத்தியதரைக் கடலைக் கடந்து தெற்கே நகர்ந்ததால், அண்டை நாடான மால்டாவில் இரவு முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் மிகவும் சுறுசுறுப்பான எரிமலையான எட்னா மலை, மக்களின் இயல்பு வாழ்க்கையை அடிக்கடி பாதிக்கிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்