இரண்டாவது நாளாகவும் வான்வெளியை மூடியது சிசிலி – விமான சேவைகள் பாதிப்பு
சிசிலியின் எட்னா எரிமலையிலிருந்து புதிதாக வெளியேறிய சாம்பல் காரணமாக, வான்வெளி கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, சிசிலியின் கட்டானியா விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து “பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை அந்தந்த விமான நிறுவனங்களிடம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய எரிமலை வெடிப்பின் தாக்கம் சிசிலிக்கு அப்பாலும் உணரப்பட்டுள்ளது. எரிமலைச் சாம்பல் மத்தியதரைக் கடலைக் கடந்து தெற்கே நகர்ந்ததால், அண்டை நாடான மால்டாவில் இரவு முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் மிகவும் சுறுசுறுப்பான எரிமலையான எட்னா மலை, மக்களின் இயல்பு வாழ்க்கையை அடிக்கடி பாதிக்கிறது.




