இலங்கை

சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளம் – நாமல்

சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதும், சிறைச்சாலைகளை நிரப்புவதும் அரசாங்கத்தின் வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை சமூக ஊடகங்களை பார்த்தே குறிப்பிட வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிடும் நிலைக்கு நிர்வாக கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது.

சிறைச்சாலை நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் வினைத்திறனான வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதும், சிறைச்சாலைகளை நிரப்புவதும் அரசாங்கத்தின் வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளம்.

சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 85 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டவர்கள். ஆகவே இவர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் 12 ஆயிரம் போராளிகளுக்கு முறையான புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சிறந்த முறையில் சமூகமயப்படுத்தப்பட்டார்கள்.

ஆகவே அதேபோன்று போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டும். அது தொடர்பான அனுபவம் எமக்குள்ளது”எனத் தெரிவித்தார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்