ஐரோப்பா

ஒரேநாளில் 230 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியா வருகை

230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயை கடந்து இன்று அதிகாலை பிரித்தானியாவை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணம் செய்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிரான்ஸ் கடற்கரைக்கு அப்பால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையில் படகு நுழைந்தபோது குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள தயாராக இருந்தது தெரியவந்துள்ளது.

“இந்த சமீபத்திய சம்பவம், ‘கடற்பயணத்திற்குத் தகுதியற்ற படகுகளில் மேலும் மேலும் அதிகமான மக்களைத் திணித்து, உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் குற்றக் கும்பல்களின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான தந்திரங்களை’ நிரூபிக்கிறது” என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

கடத்தல்காரர்கள் ஒவ்வொரு படகிலும் மேலும் மேலும் அதிகமான ஆட்களை ஏற்றி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 2018 இல் ஒரு படகிற்கு சராசரியாக ஏழு பேர் இருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது,

எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஆங்கிலக் கால்வாயை கடப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை, கடலைக் கடந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 43% குறைந்துள்ளது. வெற்றிகரமாகக் கடலைக் கடந்த படகுகளின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்