சிறிய படகில் 128 பேர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தனர் – சாதனைப் பதிவு
கடந்த வெள்ளிக்கிழமை அன்று 128 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது. ஒரே படகில் இப்பயணத்தை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே இதுவரை இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும். வெள்ளிக்கிழமையன்று, மொத்தம் 225 புலம்பெயர்ந்தோர் மூன்று படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தனர். இந்த ஆண்டு இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் சிறு படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 44% சரிவாகும். இந்த விடயம் தொடர்பில் உள்துறை அமைச்சகத்தின் […]





