பிரான்சில் இன்று 58 பிராந்தியங்களுக்கு கடும் வெப்பம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா செய்தி

பிரான்சில் கடும் வெப்ப அலை-மின்சார கட்டமைப்பு பாதிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலை, பிரான்சில் ஒரு பெரும் மின்சார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடமேற்கு பிரான்சில் சுமார் 68,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃபினிஸ்டெர் கடற்கரைப் பகுதியில் மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு மின்மாற்றி கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை இரவு குயிம்பர் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மின் கட்டமைப்பு இயக்குநர்களின் குழுக்கள் இரவு முழுவதும் மின்சாரத்தை […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் குப்பை சேகரிக்கும் நேரம் மாற்றியமைப்பு

  • June 24, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்கள் குப்பை சேகரிப்பு நேரங்களை மாற்றியமைத்து வருகின்றன. வெப்பநிலை 40°C வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் பல இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பமான காலநிலையில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய செல்தன்ஹாம் (Cheltenham), சோமர்செட் (Somerset) மற்றும் பிரிஸ்டல் (Bristol)  உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகள், அதிகாலை 4 மணி முதலே குப்பை சேகரிப்பைத் தொடங்குகின்றன. தெற்கு குளோசெஸ்டர்ஷயர் (Gloucestershire […]

பிராந்தியத்தில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், வான்வழிப் பயணங்களுக்கு உயர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பா செய்தி

ஈரான், லெபனான் வான்வெளிகள் ஆபத்து – EU எச்சரிக்கை

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானிய மற்றும் லெபனான் வான்வெளிகளைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு முகமை (EASA) விமான நிறுவனங்களுக்குப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பிராந்தியத்தில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், வான்வழிப் பயணங்களுக்கு உயர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, ஈரான், ஈராக் மற்றும் லெபனான் பகுதிகளில் திடீர் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிற அண்டை நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தும்போதும் […]

இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, உலகம் செய்தி

லெபனான் பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய திட்டம் முன்வைப்பு

  • June 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, லெபனானில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், இஸ்ரேலியப் படைகள் குறிப்பிட்ட இடங்களிலிருந்து வெளியேறவும், அங்கு லெபனான் ராணுவம் பொறுப்பேற்கவும் அமெரிக்கா ஒரு புதிய திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் நடமாட்டத்தைத் தடுக்க இந்த ஆக்கிரமிப்பு விலக்கல் திட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான தீர்வு […]

ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் – அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்

  • June 24, 2026
  • 0 Comments

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா அமைதி பேச்சுவார்ததைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இஸ்தான்புல்லில் முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை உக்ரைனிய தூதுக்குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் தொடர்சியான தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

தொழிலாளர் கட்சித் தலைமை போட்டியில் இருந்து விலகினார் டேரன் ஜோன்ஸ்

  • June 24, 2026
  • 0 Comments

டேரன் ஜோன்ஸ் தொழிலாளர் கட்சித் தலைமைக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு உள்ளபோதிலும் வரவு செலவு திட்டத்தை  தயாரிக்கக் கிடைக்கும் நேரம் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். டேரன் ஜோன்ஸின் இந்த தீர்மானம் ஆண்டி பர்ன்ஹாம் இலகுவாக பிரதமராவதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது. இதற்கிடேயே சர் கெய்ர் ஸ்டார்மரின் இராஜினாமாவால் கவலையடைந்த அல்லது மனமுடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தனது பொருளாதாரக் கொள்கைகள் […]

முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல் எதிரொலி: ஆஸ்திரேலிய கோழி இறக்குமதிக்கு தடை

  • June 24, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடம் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவிலிருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதை பப்புவா நியூ கினி (PNG) நாடு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது. 2024–25 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் டன் கோழி இறைச்சி உற்பத்தி […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு குறித்து மஹிந்த அணிக்கு அச்சம்

  • June 24, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் […]

இலங்கை

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

  • June 24, 2026
  • 0 Comments

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் இன்று (24)  24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய வடிகால் அமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பதுக்கா, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு ஏற்படும் என்றும், மகாரகம பகுதிக்கு குறைந்த அழுத்த நிலையில் நீர் விநியோகம் செய்யப்படும் […]

IAEA Director-General Rafael Grossi செய்தி

ஈரானில் விரைவில் ஆய்வு: சர்வதேச அணுசக்தி அமைப்பு நம்பிக்கை

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி மையங்களை, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்கள் விரைவில் பார்வையிடுவார்கள் என்று அதன் தலைவர் Rafael Grossi நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வுகள் நடைபெறுவது உறுதி என்றாலும், அதற்கான துல்லியமான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஆய்வாளர்களை மீண்டும் அழைப்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுவதை அந்த நாடு மறுத்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சு, அணுசக்தி முகமையுடன் தற்போதைக்கு எந்த சந்திப்போ அல்லது ஆய்வு திட்டங்களோ இல்லை என்று […]